78. | மூச்சென்பார்; உள்ளம் என்பார்; மோனம்எனும் மோட்சம்என்பார் பேச்சென்பார்; உன்னுடைய பேர் அறியார்; பூரணமே! |
| |
79. | பரம்என்பார்; பானுஎன்பார்; பாழ்வெளியாய் நின்ற வரம்என்பார்; உன்றன் வழி அறியார்; பூரணமே! |
| |
80. | எத்தனை பேரோ எடுத்தெடுத்துத் தான் உரைத்தார்; அத்தனை பேர்க்கு ஒன்றானது அறிகிலேன்; பூரணமே! |
| |
81. | நகார மகாரம் என்பார்; நடுவே சிகாரம் என்பார் வகாரயகாரம் என்பார்; வகை அறியார் பூரணமே! |
| |
82. | மகத்துவமாய்க் காம மயக்கத்துக் குள்ளிருந்து பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே! |
| |
83. | உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல் பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன், பூரணமே! |
| |
84. | வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல் காயம் எடுத்துக் கலங்கினேன்! பூரணமே! |
| |
85. | சந்திரனை மேகமது தான் மறைத்த வாறது போல் பந்தமுற யானும்உனைப் பார்க்கிலேன்; பூரணமே! |
| |
86. | செந்தா மரைத்தாளைத் தினந்தினமும் போற்றாமல் அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன்நான் பூரணமே! |
| |
87. | நீர்மேல் குமிழிபோல் நிலையற்ற காயம் இதைத் தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன்; பூரணமே! |
| |
88. | நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு வஞ்சகத்தைப் போக்க வகை அறியேன்; பூரணமே! |
| |
89. | எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து உள்ளம் அறியாது உருகினேன்; பூரணமே! |
| |
90. | மாயாப் பிரபஞ்ச மயக்கத்தி லேவிழுந்தே! ஓயாச் சனனம் ஒழிந்திலேன்; பூரணமே! |