2. | அங்கங்கு உணர்வாய் அறிவாகி யே நிரம்பி எங்கெங்கும் ஆனதிலே ஏகரித்தாய்; நெஞ்சமே! |
| |
3. | அலையாத பேரின்ப ஆனந்த வெள்ளத்தில் நிலையாய் உரு இருந்து நின்றனையே; நெஞ்சமே! |
| |
4. | பாராமல் பதையாமல் பருகாமல் யாதொன்றும் ஓராது உணர்வுடனே ஒன்றினையே; நெஞ்சமே! |
| |
5. | களவிறந்து, கொலையிறந்து, காண்பனவும் காட்சியும்போய் அளவிறந்து நின்றதிலே அன்புற்றாய் நெஞ்சமே! |
| |
6. | பேச்சிறந்து, சுட்டிறந்து, பின்னிறந்து, முன்னிறந்து, நீச்சிறந்து நின்றதிலே நேசமுற்றாய்; நெஞ்சமே! |
| |
7. | விண்ணிறந்து, மண்ணிறந்து, வெளியிறந்து, ஒளியிறந்து எண்ணிறந்து நின்றதிலே ஏகரித்தாய்; நெஞ்சமே! |
| |
8. | பார்த்த இடம் எங்கும் பரம் எனவே உள் புறம்பும் கோத்தபடி உண்மையெனக் கொண்டனையே நெஞ்சமே! |
| |
9. | ஊரிறந்து, பேரிறந்து, ஒளியிறந்து, வெளியிறந்து, சீரிறந்து நின்றதிலே சேர்ந்தனையே; நெஞ்சமே! |
| |
10. | ஆண்பெண் அலியென்று அழைக்கஅரி தாய் நிறைந்து காண்ப அரி தாய இடம் கண்ணுற்றாய் நெஞ்சமே! |
| |
11. | ஆங்காரம் அச்சம் அகற்றி அறிவினொடு தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்றாய் நெஞ்சமே! |
| |
12. | ஆதியாய் நின்ற அகண்டபரி பூரணத்தைச் சாதியா நின்ற இடம் சார்வுற்றாய் நெஞ்சமே! |
| |
13. | விருப்புவெறுப்பு இல்லாத வெட்டவெளி யதனில் இருப்பே சுகம் என்று இருந்தனையே நெஞ்சமே! |
| |
14. | ஆரும் உறாப் பேரண்டத்து அப்புறத்தும் இப்புறத்தும் நீரும் உப்பும் என்ன நிலை பெற்றாய் நெஞ்சமே! |