பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்339


வாசித்துங் காணாமல் வாய்விட்டும் போசாமல்
பூசித்துந் தோன்றாப் பொருள் காண்ப தெக்காலம்.

142
  
பன்னிரண்டு காற்புரவி பாய்ந்துசில்லந் தப்பாமல்
பின்னிரண்டு சங்கிலிக்குட் பிணிப்பதினி யெக்காலம்.

143
  
நாட்டுக்கா லிரண்டும் விட்டு நடுவுக்கா லூடேபோய்
ஆட்டுக்கா லிரண்டினுள்ளே அமர்ந்திருப்ப தெக்காலம்.

144
  
பாற்பசுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்
காற்பசுவை ஓட்டியதில் கட்டிவைப்ப தெக்காலம்.

145
  
பலவிடத் தேமனதைப் பாயவிட்டுப் பாராமல்
நிலவரையி னூடேபோய் நேர்படுவ தெக்காலம்.

146
  
காமக் கடல்கடந்து கரையேறிப் போவதற்கே
ஓமக் கனல் வளர்த்தி யுள்ளிருப்ப தெக்காலம்.

147
  
உதயச் சுடர்மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி
இதயத் திருநடன மினிகாண்ப தெக்காலம்.

148
  
வேதாந்த வேதமெல்லாம் விட்டேறி யேகடந்து
நாதாந்த மூல நடுவிருப்ப தெக்காலம்.

149
  
பட்டமற்றுக் காற்றிற் பறந்தாடும் சூத்திரம்போல்
விட்டு வெளியாக விசுவசித்த லெக்காலம்.

150
  
அட்டாங்க யோகமதற் கப்பாலுக் கப்பாலாய்
கிட்டாப் பொருளதனைக் கிட்டுவது மெக்காலம்.

151
  
ஒட்டாம லொட்டிநிற்கும் உடலுமுயிரும் பிரித்தே
எட்டாப் பழம்பதிக்கிங் கேணிவைப்ப தெக்காலம்.

152
  
பாசத்தை நீக்கிப் பசுவைப்பதியில் விட்டு
நேசத்தி னுள்ளே நினைந்திருப்ப தெக்காலம்.

153
  
ஆசார நேய அனுட்டானமும் மறந்து
பேசா மெய்ஞ் ஞானநிலைப் பெற்றிருப்ப தெக்காலம்.

154
  
பல்லாயி ரங்கோடிப் பகிரண்ட மும்படைப்பே
அல்லாது வேறில்லையென்று அறிவதினி யெக்காலம்.

155