பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்309


ஒருநெறியாய் இவர்களையும் - ஆத்தாளே
     உண்மையுடன் பூசைசெய்.
75
  
சண்டாளன் ஆனாலும் - ஆத்தாளே
     தான்வேதை காண்பானே
கண்டசெய்தி சொன்னோன்நான் - ஆத்தாளே
     கற்பவகை சொல்லுபவனே.
76
  
சொல்லுகிறேன் கரிப்பான் - ஆத்தாளே
     சுத்த இலைபரித்துச்
செல்லும் பழச்சாற்றில் - ஆத்தாளே
     செம்பழத் தளவரைத்து.
77
  
அரைத்தாவின் நெய்யதனில் - ஆத்தாளே
     அதுசிவக்கக் காய்ந்த
திரமாயோர் பீங்கானில் - ஆத்தாளே
     செப்பமுடன் வைத்தேதான்.
78
  
பதனமாய் வண்டுகட்டி - ஆத்தாளே
     பரமென்று நம்பியேதான்
திதிபூரு வந்தனிலே - ஆத்தாளே
     செயல்பொருந்தும் நாள்பார்த்தும்.
79
  
அமுதயோ கம்பார்த்து - ஆத்தாளே
     ஆனதொரு கற்பதைக்
குமுதவொலி உண்ணாக்கில் - ஆத்தாளே
     குலாவுகின்ற வாசலிலே.
80
  
பெருவிரலால் அதைத்தொட்டு - ஆத்தாளே
     பேதைமனம் எண்ணாமல்
ஒரு நெறியாய் நாலுதரம் - ஆத்தாளே
     உயரவலம் சுற்றிடவே.
81
  
நாலுதரம் சுத்திசெய்தால் - ஆத்தாளே
     நன்றாய் அகக்கதவில்
ஆலமுண்டோன் தன்னாணை - ஆத்தாளே
     அஞ்சுகத வுந்திறக்க.
82