ஒருநெறியாய் இவர்களையும் - ஆத்தாளே உண்மையுடன் பூசைசெய். | 75 |
| | |
சண்டாளன் ஆனாலும் - ஆத்தாளே தான்வேதை காண்பானே கண்டசெய்தி சொன்னோன்நான் - ஆத்தாளே கற்பவகை சொல்லுபவனே. | 76 |
| | |
சொல்லுகிறேன் கரிப்பான் - ஆத்தாளே சுத்த இலைபரித்துச் செல்லும் பழச்சாற்றில் - ஆத்தாளே செம்பழத் தளவரைத்து. | 77 |
| | |
அரைத்தாவின் நெய்யதனில் - ஆத்தாளே அதுசிவக்கக் காய்ந்த திரமாயோர் பீங்கானில் - ஆத்தாளே செப்பமுடன் வைத்தேதான். | 78 |
| | |
பதனமாய் வண்டுகட்டி - ஆத்தாளே பரமென்று நம்பியேதான் திதிபூரு வந்தனிலே - ஆத்தாளே செயல்பொருந்தும் நாள்பார்த்தும். | 79 |
| | |
அமுதயோ கம்பார்த்து - ஆத்தாளே ஆனதொரு கற்பதைக் குமுதவொலி உண்ணாக்கில் - ஆத்தாளே குலாவுகின்ற வாசலிலே. | 80 |
| | |
பெருவிரலால் அதைத்தொட்டு - ஆத்தாளே பேதைமனம் எண்ணாமல் ஒரு நெறியாய் நாலுதரம் - ஆத்தாளே உயரவலம் சுற்றிடவே. | 81 |
| | |
நாலுதரம் சுத்திசெய்தால் - ஆத்தாளே நன்றாய் அகக்கதவில் ஆலமுண்டோன் தன்னாணை - ஆத்தாளே அஞ்சுகத வுந்திறக்க. | 82 |