பக்கம் எண் :

322சித்தர் பாடல்கள்

கல்லாலே வேலிகட்டி கனமேல் ஒளிவுகட்டி
மல்லால் வெளிபுகட்டி - என் ஆத்தாளே
     மலவாசல் மாண்டுதடி.
182
  
ஆசாபாசம் அறியா தன்பு பொருந்தினபேர்
ஏசாரோ கண்டவர்கள் - என் ஆத்தாளே
     எவரும் நகையாரோ?
183
  
இன்பமுற்ற பேர்கடனை எல்லோரும் பேசுவரோ
துன்பமுற்ற பேர்கடனை - என் ஆத்தாளே
     சொல்லி நகையாரோ?
184
  
விண்ணைஎட்டிப் பாராமல் விதத்தை உற்றுப்பாராமல்
மண்ணையெட்டிப் பார்த்தொருவர் - என் ஆத்தாளே
     வலுப்பேசி ஏசுவரோ.
185
  
என்னையிவன் கொண்டான்டி இருவினையும் கண்டான்டி
சன்னைசொல்ல விண்டான்டி - என் ஆத்தாளே
     சமையம்பிணக் கானேன்டி.
186
  
இந்நிலத்திற் கண்காண ஏகாத மானிடத்தே
கன்னி அழித்தாண்ட - என் ஆத்தாளே
     கற்பைக் குலைத்தாண்டி.
187
  
சுத்தத்தார் பார்த்திருக்கச் சூதுபலபேசிப்
பத்தாவாய் வந்திருந்தான் - என் ஆத்தாளே
     பாசமதைத் தாண்டி.
188
  
அண்டத்தைக் கட்டியடி ஆசையறுத்தான்டி
தொண்டராய்த் தொண்டருக்கு - என் ஆத்தாளே
     தோற்றம் ஒடுக்கமடி.
189
  
கற்பனையும் மூன்றுவிதம் காரமாய்க் கொண்டேன்டி
ஒப்பனையும் அல்லவடி - என் ஆத்தாளே
     ஒடுக்கம் அறியேன்டி.
190
  
பாருக்குள் மாயையடி பார்க்கவெள்ளை பூத்ததடி
மேருக்குள் வெண்ணெய்யைப்போல் - என் ஆத்தாளே
     முழங்கிக் கலந்திடவே.
191