கல்லாலே வேலிகட்டி கனமேல் ஒளிவுகட்டி மல்லால் வெளிபுகட்டி - என் ஆத்தாளே மலவாசல் மாண்டுதடி. | 182 |
| |
ஆசாபாசம் அறியா தன்பு பொருந்தினபேர் ஏசாரோ கண்டவர்கள் - என் ஆத்தாளே எவரும் நகையாரோ? | 183 |
| |
இன்பமுற்ற பேர்கடனை எல்லோரும் பேசுவரோ துன்பமுற்ற பேர்கடனை - என் ஆத்தாளே சொல்லி நகையாரோ? | 184 |
| |
விண்ணைஎட்டிப் பாராமல் விதத்தை உற்றுப்பாராமல் மண்ணையெட்டிப் பார்த்தொருவர் - என் ஆத்தாளே வலுப்பேசி ஏசுவரோ. | 185 |
| |
என்னையிவன் கொண்டான்டி இருவினையும் கண்டான்டி சன்னைசொல்ல விண்டான்டி - என் ஆத்தாளே சமையம்பிணக் கானேன்டி. | 186 |
| |
இந்நிலத்திற் கண்காண ஏகாத மானிடத்தே கன்னி அழித்தாண்ட - என் ஆத்தாளே கற்பைக் குலைத்தாண்டி. | 187 |
| |
சுத்தத்தார் பார்த்திருக்கச் சூதுபலபேசிப் பத்தாவாய் வந்திருந்தான் - என் ஆத்தாளே பாசமதைத் தாண்டி. | 188 |
| |
அண்டத்தைக் கட்டியடி ஆசையறுத்தான்டி தொண்டராய்த் தொண்டருக்கு - என் ஆத்தாளே தோற்றம் ஒடுக்கமடி. | 189 |
| |
கற்பனையும் மூன்றுவிதம் காரமாய்க் கொண்டேன்டி ஒப்பனையும் அல்லவடி - என் ஆத்தாளே ஒடுக்கம் அறியேன்டி. | 190 |
| |
பாருக்குள் மாயையடி பார்க்கவெள்ளை பூத்ததடி மேருக்குள் வெண்ணெய்யைப்போல் - என் ஆத்தாளே முழங்கிக் கலந்திடவே. | 191 |