பக்கம் எண் :

தேசிய கீதங்கள்

தமிழ் நாடு

வாழிய செந்தமிழ்

ஆசிரியப்பா.


வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

\பு{[குறிப்பு]: இப்பாடலின் தலைப்பு 1937 ஆம் வருடப் பதிப்பில் ‘புது வருஷம்’ என உள்ளது.}