பக்கம் எண் :

தனிப் பாடல்கள் : பொதுமைப் பாடல்கள்



சமூகம்
 

மறவன் பாட்டு
 

மண்வெட்டிக் கூலிதின லாச்சே!
எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!

விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே!
இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே!
1

நாணிலகு வில்லினொடு தூணி
நல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி,
பூணிலகு திண்கதையும் கொண்டு, நாங்கள்

போர்செய்த காலமெல்லாம் பண்டு.
2

கன்னங் கரியவிருள் நேரம்
அதில்
காற்றும் பெருமழையும் சேரும்;

சின்னக் கரியதுணி யாலே
எங்கள்
தேகமெல்லாம் மூடிநரி போலே,
3

ஏழை யெளியவர்கள் வீட்டில்
இந்த
ஈன வயிறுபடும் பாட்டில்

கோழை யெலிக ளென்னவே
பொருள்
கொண்டு வந்து ... ... ...
4

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்
ஓதுவார்;
மூன்றுமழை பெய்யுமடா மாதம்;

இந்நாளி லேபொய்ம்மைப் பார்ப்பார்

இவர்
ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்.
5

பேராசைக் காரனடா பார்ப்பான்
ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்.

யாரானா லும்கொடுமை ... ... ...
...
... ... ... ... ... ...
6

பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்
நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்

கொள்ளைக் கேசென் ... ... ... ...

... ... ... ... ... ... ...
7

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?

... ... ... ... ... ... ...

... ... ... ... ... ... ...
8

நாயும் பிழைக்கும் இந்தப்
பிழைப்பு;
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு;

பாயும் கடிநாய்ப் போலீசுக்
காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பீசு.
9

சோரந்தொழிலாக் கொள்வோமோ?
முந்தைச்
சூரர் பெயரை அழிப்போமோ?

வீர மறவர் நாமன்றோ?
இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?
10