சமூகம்
|
|
மறவன் பாட்டு
|
|
மண்வெட்டிக் கூலிதின லாச்சே! எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே! இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே! |
1 |
நாணிலகு வில்லினொடு தூணி நல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி,
பூணிலகு திண்கதையும் கொண்டு, நாங்கள்
போர்செய்த காலமெல்லாம் பண்டு. |
2 |
கன்னங் கரியவிருள் நேரம் அதில்
காற்றும் பெருமழையும் சேரும்;
சின்னக் கரியதுணி யாலே எங்கள்
தேகமெல்லாம் மூடிநரி போலே, |
3 |
ஏழை யெளியவர்கள் வீட்டில் இந்த
ஈன வயிறுபடும் பாட்டில்
கோழை யெலிக ளென்னவே பொருள்
கொண்டு வந்து ... ... ... |
4 |
முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்;
மூன்றுமழை பெய்யுமடா மாதம்;
இந்நாளி லேபொய்ம்மைப் பார்ப்பார்
இவர் ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார். |
5 |
பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்.
யாரானா லும்கொடுமை ... ... ...
...
... ... ... ... ... ... |
6 |
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்
கொள்ளைக் கேசென் ... ... ... ...
... ... ... ... ... ... ... |
7 |
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... |
8 |
நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு;
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு;
பாயும் கடிநாய்ப் போலீசுக் காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பீசு. |
9 |
சோரந்தொழிலாக் கொள்வோமோ? முந்தைச்
சூரர் பெயரை அழிப்போமோ?
வீர மறவர் நாமன்றோ?இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ? |
10 |