|
நான்
|
இரட்டைக் குறள்வெண் செந்துறை
|
வானில் பறக்கின்ற புள்ளெலாம்
நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான
கானிழல் வளரும் மரமெலாம்நான்
காற்றும் புனலும் கடலுமே நான். |
1 |
இப்பாட்டின் தலைப்பாக ‘இயற்கை சொல்லிடை’ என்று முதல் பதிப்பிலே உள்ளது.
|
[பாட பேதம்]:
‘காண்பதெல்லா மறையுமென்றால் மறைந்த வெல்லாம்’ என்றும்,
‘காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்த வெல்லாம்’
என்றும் பாடம் கொள்ளலாம் என்கிறார் கவிமணி.
‘காண்பதுவே யுறுதி யென்னாய்’ என்றும்,
‘காண்பதுவே யுண்மை கண்டாய்’ என்றும்
பாடம் கொள்ளலாம் என்கிறார் கவிமணி.
|
|
விண்ணில் தெரிகின்ற மீனெலாம்நான்
வெட்ட வெளியின் விரிவெலாம்நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம்நான்
வாரியிலுள்ள உயிரெலாம்நான். |
2 |
கம்ப னிசைத்த கவியெலாம்நான்
காருகர் தீட்டும் உருவெலாம்நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமேநான். |
3 |
இன்னிசைமாதரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமேநான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம்நான். |
4 |
மந்திரங் கோடிஇயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம்நான்
தந்திரங் கோடி சமைத்துளோன்நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். |
5 |
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்டநற் சக்திக் கணமெலாநான்
காரண மாகிக் கதித்துளோனான். |
6 |
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன்நான்
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்கு முதற்சோதிநான். |
7 |