பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

வேதாந்தப் பாடல்கள்

நான்

இரட்டைக் குறள்வெண் செந்துறை

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
  மண்ணில் திரியும் விலங்கெலாம் நான
கானிழல் வளரும் மரமெலாம்நான்
  காற்றும் புனலும் கடலுமே நான்.
1

இப்பாட்டின் தலைப்பாக ‘இயற்கை சொல்லிடை’ என்று முதல் பதிப்பிலே உள்ளது.

[பாட பேதம்]: ‘காண்பதெல்லா மறையுமென்றால் மறைந்த வெல்லாம்’ என்றும்,
‘காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்த வெல்லாம்’
என்றும் பாடம் கொள்ளலாம் என்கிறார் கவிமணி.

‘காண்பதுவே யுறுதி யென்னாய்’ என்றும்,
‘காண்பதுவே யுண்மை கண்டாய்’ என்றும்
பாடம் கொள்ளலாம் என்கிறார் கவிமணி.

விண்ணில் தெரிகின்ற மீனெலாம்நான்
  வெட்ட வெளியின் விரிவெலாம்நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம்நான்
  வாரியிலுள்ள உயிரெலாம்நான்.
2

கம்ப னிசைத்த கவியெலாம்நான்
  காருகர் தீட்டும் உருவெலாம்நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
  எழில்நகர் கோபுரம் யாவுமேநான்.
3

இன்னிசைமாதரிசையுளேன் நான்
  இன்பத் திரள்கள் அனைத்துமேநான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
  பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம்நான்.
4

மந்திரங் கோடிஇயக்குவோன் நான்
  இயங்கு பொருளின் இயல்பெலாம்நான்
தந்திரங் கோடி சமைத்துளோன்நான்
  சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.
5

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன்
  அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்டநற் சக்திக் கணமெலாநான்
  காரண மாகிக் கதித்துளோனான்.
6

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
  ஞானச் சுடர்வானில் செல்லுவோன்நான்
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
  அறிவாய் விளங்கு முதற்சோதிநான்.
7