|
"உள்ளுத
லுள்ளி யுரைத்த லுரைத்ததனைத்
தெள்ளுத லன்றே செயற்பால - வள்ளுவனார்
முப்பாலின்
மிக்க மொழியுண் டெனப்பகர்வார்
எப்பா வலரினு
மில்"
என்று
முகையலூர்ச்
சிறுகருந்தும்பியார்
பெயரிலும்,
"அறநான்
கறிபொரு ளேழொன்று காமத்
திறமூன் றெனப்பகுதி செய்து - பெறலரிய
நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலு மொழிந்த
பொருள்"
என்று
தொடித்தலை விழுத்தண்டினார் பெயரிலும்,
"எல்லாப்
பொருளும் இதன்பா லுளவிதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லாற்
பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை"
என்று
மதுரைத் தமிழ்நாகனார் பெயரிலும்,
"அறமுதல்
நான்கும் அகலிடத்தோ ரெல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார்ர் பான்முறைநே ரொவ்வாதே
முன்னை முதுவோர் மொழி"
என்று
கோவூர்கிழார் பெயரிலும்,
"இம்மை
மறுமை யிரண்டும் எழுமைக்கும்
செம்மை நெறியில் தெளிவுபெற - மும்மையின்
வீடவற்றி
னான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடினரின்குறள்வெண் பா"
என்று
இழிகட் பெருங்கண்ணனார் பெயரிலும்,
"உள்ளக்
கமல மலர்த்தி யுளத்துள்ள
தள்ளற் கரியவிருள் தள்ளுதலால் - வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்குமெனக்
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு"
என்று
குலபதி நாயனார் பெயரிலும்,
"பொய்ப்பால
பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து
வாழ்வார் மனத்து"
என்று
தேனீக்குடிக் கீரனார் பெயரிலும், |