பக்கம் எண் :

மொழியதிகாரம்21

நாழி-நாடி

      நுள்-நள்-நாள்-நாழி=உட்டுளைப் பொருள், மூங்கிற்படி, முகவைப்படி.
நெசவுக்குழல், அம்பறாத்தூணி, கன்னல் (நாழிகை வட்டில்), நாழிகை. .
நாழி, . நாழி.

     நாழிக்கிணறு, நாழிச்செம்பு, நாழிமணி, நாழியோடு, நாழிவழி என்பன
தொன்றுதொட்ட பெருவழக்குச் சொற்கள்.

நாழிகை-நாடிகா

     நாழி-நாழிகை = 1. உட்டுளைப் பொருள்.

     2 . நாழிகை வட்டில்.

     3. நாழிகை வட்டிலில் உள்ள நீர் அல்லது மணல் முழுதும்
     ஒரு முறை விழும் நேரம் = 24 நிமையம் (நிமிஷம்). 4. அறை.

     உண்ணாழிகை = உள்ளறை (கர்ப்பக்கிருகம்).

     "உண்ணாழிகையா ருமையாளோடு" (தேவா. 592: 3).

     உண்ணாழிகை வாரியம் = கோயில் மேற்பார்வைக் குழு (I.M.P.Cg.205).

     திருவுண்ணாழி-திருவுண்ணாழிகை (கர்ப்பக்கிருகம்).

     "திருவுண்ணாழிகை யுடையார் வசமே நாள்தோறும் அளக்கக்
     கடவோம்" (S. I. I.I, 143).

     ம. நாழிக, . நாழிகே.

     நாழிகைக் கணக்கன் (சிலப். 5: 46, உரை), நாழிகைக்கல்
(Mile-stone), நாழிகைத் தூம்பு (நீர்வீசுங் கருவி வகை, பெருங்.
உஞ்சைக். 38: 106), நாழிகைப் பறை (சிலப். 3: 27, உரை), நாழிகை
வட்டம் (கால்வாயிலிருந்து தண்ணீர் பகிர்ந்துகொள்ளும் முறை),
நாழிகை வட்டில் (சிலப். 5: 49, உரை), நாழிகை வழி என்பன தொன்று
தொட்ட பெருவழக்குச் சொற்கள்.

நிமை-நிமி

     இமை = இமைத்தல், கண்ணிமை.

     ம. இம, க., து. இமெ.

     இமை-நிமை = இமைத்தல், கண்ணிமை. க. எவே.

     "நீலிக்குக் கண்ணீர் நிமையிலே" (பழமொழி).

     வடவர் நிமி என்னும் சொல்லை இக்குவாவின் மகன் (நிமி)
பெயரொடு தொடர்புபடுத்தி, அவன் வசிட்டர் சாவிப்பினால் தன்
உடம்பை யிழந்து எல்லா வுயிரிகளின் கண்களையும் இடமாகக்
கொண்டானென்று, ஒரு கதை கட்டுவர் (விஷ்ணு புராணம், 4: 5).