பக்கம் எண் :

மொழியதிகாரம்85

     "கொடிச்சி காக்கும் பெருங்குர லேனல்" (ஐங். 296).

வளையம்-வலய

     வள்-வளை-வளையம் = வட்டம், வளையல்.

வனம்-வனஸ்- (இ.வே.)

     வனம் = அழகு. "வனமுலை’’ (கலித். 97).

     வனப்பு = அழகு. "செவ்வானத்து வனப்பு’’ (புறம். 4).

வாடகை-பாடக் (bh, )

     வாழ்-(வாழகை)-வாடகை = வீட்டிற் குடியிருத்தற்குக் கட்டும் மாத
அல்லது ஆட்டைக் கட்டணம்.

     பின்பு இயங்குதிணைப் பொருள்களைப் பயன்படுத்தற்குக்
கொடுக்குங் கட்டணமும் இப் பெயர்பெற்றது.

     வடவர் பட் (bha) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டி,
அதையும் ப்ருத்த(bhŠta) என்பதன் திரிபாக்குவர். bhŠ= பொறு. bhŠta=தாங்கப்பெற்றவன், கூலிக்கு அமர்த்தப்பெற்ற வேலைக்காரன்
அல்லது உழைப்பாளி அல்லது படைஞன். இவ்வகையிலும் மூலம்
தமிழ்ச்சொல்லே. பொறு-bhŠ.

வாடி-வாடீ ()

     வாடுதல் = வளைதல், பயிர் பச்சை வளைந்து பட்டுப்போதல்.

     வாட்டம் = வளைவு, பொலிவழிவு.

     அங்கணம் வாட்டசாட்டமாயிருந்தால் தண்ணீர் சரட் டென்று
போகும் என்னும் வழக்கை நோக்குக.

     வாடு-வாடி = வளைசல், அடைப்பு, சூழ வேலி கோலிய விறகு
கடை அல்லது மரக்கடை.

வாரி-வாரி (இ.வே.)

     வார்தல் = ஒழுகுதல்.

"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள"

(தொல். 800)

     வார்-வாரி = நீர், வெள்ளம், கடல், நீர்நிலை. வார் = நீர்.

     "வாராயிர முகமா நுகர்மஞ்சு" (பாரத அருச்சுனன்றவ. 159).

வாரணம்-வாருண, வருண

     வரிதல் = வளைதல். வரி-வார்-வாரணம் = நிலத்தைச் சூழ்ந்துள்ள
கடல்."வாரணஞ் சூழ்புவி" (தனிப்பாடல்). வாரணம்-