மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே (1731)
பெரிய திருமொழி 8-9-4
என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம்
அரக்கோணம் புகைவண்டி நிலையத்திலிருந்து 25 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது. சோளசிம்மபுரம் எனவும், சோளிங்கர் எனவும்
கடிகாசலம் எனவும் வழங்கப்பெறும்.