கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா, தீ
மாற்றமும் சாரா வைகயறிந்தேன் - ஆற்றங்
கரைகிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும், மாயன்
உரைக் கிடக்கு முள்ளத் தெனக்கு (2431)
என்று இத்தலத்தில் பள்ளிகொண்ட இறைவனை ஆற்றங்கரை
கிடக்கும் கண்ணன் என்று திருமழிசை ஆழ்வார் இப்பெருமானின்
பெயரைக் குறித்து மங்களாசாசனம் செய்ததால் மங்களாசாசனம் பெற்றது
இத்தலம். தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக கும்பகோணம்
செல்லும் பாதையில் உள்ளது. இவ்வழியில் 4 திவ்ய தேசங்கள் உள்ளன.
பாபநாசம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது.