நீர்வண்ணப்பெருமாள் கோவில் - திருநீர்மலை

    அன்றாயர் குலக்கொடி யோடனிமர்
    மலர் மங்கை யொடளப்பளாவி, அவுணர்க்
    கென்றானு மிரக்க மில்லாதவனுக
    குறயு மிடமாவ, இரும்பொழில் சூழ்
    நன்றாய புனல் நறயூர் திருவா
    லிகுடந்த தடந்திகழ் கோவல் நகர
    நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற்
    கிடம் மாமலயாவ நீர்மலயே (1078)
        பெரியதிருமொழி 2-4-1

நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என்ற நான்கு திருக்கோலங்களில்
திருநீர்மலையில் பெருமாள் காட்சி தருகிறார். நறையூர் எனப்படும்.
நாச்சியார் கோவிலில் நின்ற வண்ணத்தில் உள்ளான். திருக்குடந்த
என்னும் கும்பகோணத்தில் சயன     திருக்கோலத்தில் உள்ளான்.
திருவாலி திவ்ய தேசத்தில் அமர்ந்த நிலையில் உள்ளான்.
திருக்கோவலூரில் உலகளந்த பெருமாளாகி நடந்த     திருக்
கோலத்திலுள்ளான். இந்த திருக்கோலங்களெல்லாம் ஒரு சேரக்
காட்சி கொடுக்கின்றான் திருநீர் மலையில். அவன்தான் அவுணர்
எனப்படும் இராக்கதர் குழாங்களயெல்லாம் அழித் ஆயர்குல
மகளோடு உள்ள கண்ணபிரான், என்று திருமங்கயாழ்வாரால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம். சென்னக்கு அருகாமயிலுள்ள
பல்லாவரம் என்னும் ஊரிலிருந்து மேற்கில் சுமார் 5 கி.மீ. தொலவைில்
உள்ளன. தற்போது சென்னையிலிருந்து பேருந்துகள் உள்ளன.

பின்