தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாரதியார் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள்

  • பாடம் - 6

    C01116 பாரதியார் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?  
     

    பாரத மணித்திரு நாட்டின் விடுதலைக்காக மட்டுமன்றிப் பெண்களின் விடுதலைக்காவும் பாடுபட்டவர் மகாகவி பாரதியார். 'செவ்விது, செவ்விது, (செவ்விது = உயர்வானது) பெண்மை' என்று பெண்ணின் பெருமையைப் பெருமித உணர்வோடு பேசியவர் அவர். என்னென்ன வேண்டும் என்று பட்டியல் இட்டுப் பாடிய போது 'பெண்விடுதலை வேண்டும்' என்று மறவாமல் வேண்டியவர் அவர். 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று ஆவேசமாக முழங்கியவர் அவர்; பெண்ணைச் சக்தியின் வடிவமாகக் கண்டு வணங்கியவர்; அதனாலேயே 'சக்திதாசன்' என்ற புனை பெயரைச் சூடிக்கொண்டவர். குழந்தை, பாப்பா, காதலி, தாய், தலைவி, தெய்வம் எனப் பலப்பல வடிவங்களில் பெண்மையை வியந்து போற்றியவர் அவர். அவரது நோக்கில் பெண்மையைப் படம்பிடித்துக் காட்ட முயல்கிறது இப்பாடம்.

     

    இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?    

     

    •  
    பாரதியார் பெண்மையை எந்த அளவிற்கு மதித்துப் போற்றினார் என்பதை அறியலாம்.
    •  
    கற்பு என்ற ஒழுக்கத்தை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாகப் பாரதியார் செய்த புதுமையை அறியலாம்.
    •  
    பாரதியார் கனவு கண்ட புதுமைப்பெண்ணின் இயல்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.
    •  
    பெண்விடுதலை குறித்துப் பாரதியாரின் எண்ணங்களையும், அவ்விடுதலையை நனவாக்கச் செய்ய வேண்டுவன பற்றியும் அறியலாம்.

     

     

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:00:35(இந்திய நேரம்)