Primary tabs
-
பாடம் - 1
C01221 - பிற்கால அறநூல்கள்: பொது அறிமுகம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
பிற்கால அறநூல்களைப் பற்றிய அறிமுகத்தை இந்தப் பாடம் வழங்குகிறது. பிற்கால அறநூல்கள் தோன்றியதற்கான காரணத்தையும் சூழலையும் தெரிவிக்கிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை தோன்றிய அறநூல்கள் பற்றிய குறிப்பையும் இது வழங்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
சமுதாயம் சீராகச் செயல்படுவதற்கு அறநூல்கள் வழிகாட்டும் என்பதை அறிய இயலும்.
-
பிற்காலத்தில் தோன்றிய அறநூல்கள் யாவை என்பதை அறியலாம்.
-
சமயம் சார்ந்தும் அறநூல்கள் தோன்றியுள்ளன என்பதை உணர முடியும்.
-
சிற்றிலக்கியங்களிலும் அறக்கருத்துகள் உள்ளன என்பதை அறியலாம்.
-
பிற்காலத்தில் தோன்றிய ஆத்திசூடி போன்ற நூல்களையும் அவற்றின் நோக்கத்தையும் அறிந்துகொள்ள முடியும்.
-