தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • ஊரகத்தான் கோவில் - திரு ஊரகம்

    வரலாறு

    வாமன வடிவம் கொண்டு மகாபலியிடம் மூன்றடி மண் வேண்டிய
    எம்பெருமான் திரு விக்கிரம அவதாரம் எடுத்து மகாபலிச்
    சக்ரவர்த்தியை பாதாளத்திற்கு அனுப்பினான். பாதாளம் புக்க
    மாகபலிக்கு, தம்பொருட்டு எம்பெருமான் உலகளந்து நெடிய
    திருமேனியுடன், திருவிக்ரமனாய் நின்ற திருக்கோலத்தை முழுமையாக
    தரிசிக்க முடியவில்லையே, எம்பெருமானின் பாதம் பட்டு பாதாள
    லோகத்தில் புதுந்துவிட்டோமே, நம்பொருட்டு எழுந்த அவதாரத்தின்
    முழு ரூபத்தை முழுமையாக காணமுடியவில்லையே என்றெண்ணி
    வருந்தி, திருவிக்ரம அவதாரத்தைக் காட்டியருள வேண்டுமென பாதாள
    லோகத்திலேயே எம்பெருமானைக் குறித்து தவமிருக்க அந்த
    தவத்திற்கு மெச்சி இந்த ஸத்யவ்ரத ஷேத்ரமான காஞ்சியில்
    மகாபலிச் சக்ரவர்த்திக்கு உலகளந்த திருக்கோலத்தை காட்டிக்
    கொடுத்த ஸ்தலமே ஊரகம் ஆயிற்றென்பர்.

    பாதாள லோகத்தில் சாதாரண மனிதனைப் போல இருந்த மகாபலி
    நெடிதுயர்ந்து உலகளந்த திருக்கோலத்தை மீண்டும் முழுமையாக
    என்னால் தரிசிக்க இயலவில்லையே என்று பதைபதைத்து
    எம்பெருமானைத் துதித்து நிற்க எளிய விதத்தில் அவனுக்கு காட்சி
    தரும்பொருட்டு இந்த இடத்திற்கு அருகிலேயே ஆதி சேடனாக
    காட்சியளித்தார். இந்த இடம் பேரகம் எனப்படும்.

    ஆதிசேடனாக காட்சியளித்த அந்த இடமே தற்போது பேரகம்
    என்ற பெயரில் இத்தலத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது.
    இங்கு எம்பெருமான் சரப ரூபமாகக் காட்சியளிக்கிறார். பார்ப்பதற்குப்
    பேரெழில் பொருந்தியவர் இந்தப் பெருமாளுக்கு ஊரகத்தான் என்று
    பெயர். உரகம் என்பது பாம்பைக் குறிக்கும். எனவேதான் ஆதிசேடன்
    ரூபத்தில் உள்ள பெருமான் உரகத்தான் என்று அழைக்கப்பட்டு
    ஊரகத்தான் ஆயிற்றார் போலும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:04:20(இந்திய நேரம்)