Primary tabs
- முகப்பு
- தமிழ்
- தமிழர்
- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
- தனிமகனார்
- தாமப்பல் கண்ணனார்
- தாமோதரனார்
- தாயங்கண்ணனார்
- தீன்மதி நாகனார்
- தும்பிசேர் கீரனார்
- துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்
- துறையூர் ஓடைகிழார்
- தூங்கலோரியார்
- தேய்புரிப் பழங்கயிற்றியனார்
- தேவகுலத்தார்
- தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
- நக்கண்ணையார்
- நக்கீரர்
- நச்சினார்க்கினியர்
- நம்பிகுட்டுவனார்
- நம்பிநெடுஞ்செழியன்
- நல்லந்துவனார்
- நல்லியக்கோடன்
- நாகம்போத்தன்
- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
- நெடுங்கழுத்துப் பரணர்
- நெடும்பல்லியத்தன்
- நொச்சி நியமங்கிழார்
- நோய் பாடியார்
- பரூஉமோவாய்ப் பதுமனார்
- பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன்
- பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
- பாண்டியன் அறிவுடை நம்பி்
- பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
- பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி்
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தமிழிலக்கியம்
-
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை
தங்கல் என்பது ஓர் ஊரின் பெயர். இவ்வூரில் வாழ்ந்த புலவர் வெண்ணாகனார். இந்த வெண்ணாகனார் நகைகள் செய்யும் பொற்கொல்லராக விளங்கியவர். இவரது பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் 6 உள்ளன. அவை அகநானூறு 48, 108, 355, குறுந்தொகை 217, நற்றிணை 313, புறநானூறு 326 ஆகியவை ஆகும்.
அகநானூறு (48) தலைவி தலைவனை நினைத்துக் கொண்டிருக்கும் நிலையைத் தோழி செவிலித் தாய்க்கு அறத்தோடு எடுத்துரைக்கும் செய்தியைக் கொண்ட பாடலாகும்.
வேங்கைப் பூத்திருக்கும் மரத்தைப் பார்த்த தலைவி அதனைப் புலி என மயங்கிப் புலி புலி என்று கூவினாளம். அங்கு வந்த தலைமகன் வில்லைக் கையிலேந்திக் கொண்டு எங்கே புலி என்று கேட்டானாம். அவள் வேங்கை மரத்தைக் காட்டப் ‘பொய்யும் கூறுவையோ’ என்று புன்னகை செய்து விட்டுச் சென்றுவிட்டானாம். அது முதல் தலைவி அவனையே எண்ணிக் கொண்டிருக்கிறாளாம்.
ஐந்து கை விரல்கள் போல ஆறு இதழ்களுடன் பூத்திருக்கும் காந்தள் பூவில் அமர்ந்தும் எழுந்து பறந்தும் ஆடும் வண்டு ‘கை ஆடு வட்டு’ போல் இருக்குமாம். கைகளில் சிறு கல்லை வைத்துக் கொண்டு தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடும் இக்காலப் ‘பாண்டிக் கல்’ விளையாட்டுப் போன்றது என்பதை (அகநானூறு 108) வழி உணரமுடிகிறது.
பாறைகளின் மேல் முத்துக்கள் கிடப்பது போல் யானையின் மேல் நீராவித் துளிகள் தெரித்துக் கிடந்தனவாம். அந்தத் துளிகள் பளிங்குக் கற்கள் போலவும் காணப்பட்டனவாம். ஞெகிழி என்பது தீப்பந்தம். இரவில் தினையை மேய வரும் யானைகளை ஓட்டக் காடவர் தம் கையிலுள்ள நெகிழியை எறிவர். அது மின்னல் போலப் பாய்ந்ததாம் என்பதை அகநானூறு பாடல் வழி அறிய முடிகிறது.
பிரிவு உணர்த்திய தோழியிடம் தலைவி சொல்கிறாள். தலைவன் இருப்பிடத்திற்கே சென்று நம் வளையல் கழல்வதைக் காட்டி நீ பிரிந்து செல்வது எமக்கு ஒத்தது அன்று என்று சொல்லி விட்டு வந்துவிடலாம் வா என்கிறாள் தோழியிடம் தலைவி இதனைக் கூறுவது அகநானூறு 355 பாடல் மூலம் தெளிவாகிறது.
குறுந்தொகை (217) பாடலில் தலைவன் உயர்ந்தவன் எனவும், தான் மெல்லியள் எனவும் தலைவி தன்னைப் பற்றி எண்ணியவளாய்த் தலைவனுடன் ஓடிப்போக ஒப்பித் தன் தோழியிடம் சொல்கிறாள் தலைவி.
நற்றிணை (313)ல் தாய் தன்னை வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளதைத் ‘தினை கொய் பதம் பெற்றது’ என்று கூறித் தலைவனை வரைந்து எய்தும்படி வீட்டுக்கு பக்கத்தில் தலைவிக்காகக் காத்திருக்கும் தலைவனிடம் தோழி சொல்கிறாள்.
புறநானூறு பாடல் வழியாக, இந்தப் பாடல் ‘மூதின் முல்லை’ என்னும் துறையைச் சேர்ந்தது. மறவன் குடும்பத்தின் பெருமை இதில் சொல்லப்படுகிறது. குடும்பத்தின் மூதாட்டி இரவில் விளக்கு வெளிச்சத்தில் பஞ்சை அடித்துத் தூய்மை செய்கிறாள். அந்த ஓசையைக் கேட்டு குஞ்சை அடைகாக்கும் கோழியும் நடுங்குகிறது. குஞ்சைப் பிடிக்கச் செல்லும் பூனையும் நடுங்குகிறது.
அந்த முதுகுடிப் பெண் தன் செல்வர்கள் பிடித்துவந்த உடும்புக் கறியைச் சமைத்துத் தருகிறாள். தயிர் சோற்றுக்குத் தொட்டுக் கொள்ள அந்த உடும்புக் கறி விருந்தாக வந்த பாணரோடு சேர்ந்து அந்தக் குடும்பமே அதனை உண்கிறது.
வீட்டுத் தலைவன் அரசனுக்காகப் போரிட்டுப் பட்டத்து யானையின் முகத்தில் கட்டப்பட்டிருக்கும் பொன்னால் செய்த ஓடையைப் பரிசிலாகப் பெறுவதை எண்ணித் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். இவ்வாறு சுவையானச் செய்திகளை இவர் தம் பால்கள் தருகின்றன.
- பார்வை 2272