தலில் தளர்ச்சியில்லாதவரது தொடர்பு, நிலைதிரியா நிற்கும் பெரியோர் நெறியடையநின்றனைத்து - இயல்பாகவே தமது பெருந்தன்மையான நிலையில் திரியாமல் நிற்கும் பெரியோர் தமக்கொரு வீடுபேற்றுநெறி வந்து பொருந்த அதன்கண் அழுந்த நின்றொழுகினாற்போன்ற தன்மையுடையது. (க-து.)சுற்றத்தாரைத் தாங்குவோர் தொடர்பே உலகுக்கு இனிதாவது. (வி-ம்.)நில்லா : முற்றெச்சம். சிற்றினத்தா ரென்றது ஈண்டு, அண்டினாரை ஆதரிக்கும் பெருந்தன்மையில்லாத கீழோரென்க. உலகில் அவரே பலராதலின் அவரது கேண்மையும் நில்லா வெனப் பன்மையாற் கூறப்பட்டது. பிறரை ஆதரிக்கும் வாய்ப்பு நேர்தலைப் பெரியோர் ஒரு நற்பேறாகக் கருதி மகிழ்வராதலின் நெறியடைய நின்றனைத்து என உவமிக்கப்பட்டது; இது ‘சிறப்பின் தீராக் குறிப்பின்'1வந்தது, ஆல் : அசை. (4) 205. இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல் என்னும் இலராம் இயல்பினால் - துன்னித் தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும் தலைமக்க ளாகற்பா லார். (பொ-ள்.)இன்னர் - இவர் இத்தகையவர், இனையர் - இவர் இவ்வளவினர்; எமர் - இவர் எம்மைச் சேர்ந்தவர், பிறர் - இவர் பிறரைச் சேர்ந்தவர், என்னுஞ் சொல் என்னும் இலராம் இயல்பினால் - என்னுஞ் சொல் சிறிதும் இலராகிய தன்மையினால், துன்னித் தொலைமக்கள் துன்பம் தீர்ப்பாரே - நிலையிழந்த மக்களின் இன்னலைத் தாமே அவரையடைந்து தீர்த்து வைப்பவரே, யார்மாட்டும் தலை மக்களாகற்பாலார் - அனைவரிடத்தும் மேன்மக்களாகக் கருதப்படும் இயல்புடையவராவர். (க-து.)அனைவர்க்கும் ஒப்ப இடுக்கண் தீர்த்து ஆதரிப்பவரே அனைவர்க்குந் தலைவராதற்குரியர்.
1. தொல். உவம. 10.
|