| சந்திர கவிகை ஓங்கும் தயரத ராமன் தாமச் |
| சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி. |
| |
இந்திர குருவும் அன்னார் - தேவ குரு வியாழனை நிகர்த்தவராய்; எனையவர் என்ன நின்ற- எத்துணைப் பேர் எனக் கருதுமாறு பலராக நின்ற; மந்திர விதியினாரும்;- மந்திர விதிகளில் தேர்ந்தவரும்; வசிட்டனும்- மாமுனி வசிட்டரும்; சந்திர கவிகை ஓங்கும் - நிலவென ஒளிரும் வெண்கொற்றக் குடை உயர்த்திய; தயரதராமன் - தசரத ராமனுக்கு; தாமம்- ஒளிமிக்கதும்; சுந்தரம்- அழகு வாய்ந்ததுமான; மவுலி சூடும் - திருமுடி சூடுகின்ற; ஓரையும் நாளும் தூக்கி- நல்வேளையையும் நாளையும் ஆராய்ந்து; வரைந்து விட்டார் - எழுதி அனுப்பினார். |
(25) |
| 10315. | அடுக்கிய உலகம் மூன்றும், ஆதரத் தூதர் கூற, |
| இடுக்கு ஒரு பேரும் இன்றி, அயோத்தி வந்து |
| இறுத்தார் என்றால், |
| தொடுக்குறு கவியான் மற்றைத் துழனியை இறுதி |
| தோன்ற |
| ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து |
| ஒருவற்கு உண்டோ? |
| |
அடுக்கிய உலகம் மூன்றும்- ஒன்றன் மேல் ஒன்றாகத் திகழும் மூன்று உலகங்களிலும்; ஆதரத் தூதர்- ஆர்வம் மிக்க தூதர்கள்;கூற - (திருமுடி சூட்டு நிகழ்ச்சியை) எடுத்துச் சொல்ல; இடுக்கு ஒரு பேருமின்றி - சிற்றிடம் கூட வெற்றிடமாக இல்லாமல்; அயோத்தி வந்து இறுத்தார் என்றால் - (அத்துணைப் பேரும்); அயோத்தியில் வந்து தங்கினார்கள் எனில், மற்றை- வேறு; துழனியை - பேரொலியை; இறுதி தோன்ற- முடிவாக; ஒடுக்குறுத்து - தொகுத்து; தொடுக்குறு கவியான்- புனைகின்ற கவியால்; உரைக்கும் தன்மை - எடுத்துரைக்கும் ஆற்றல்;நான் முகத்து ஒருவற்கு உண்டோ - பிரம தேவனுக்கும் இருக்குமோ? (இராது என்றபடி.) |
(26) |
| 10316. | அவ் வயின் முனிவனோடும் பரதனும், அரியின் சேயும், |
| செவ்வியின் நிருதர்கோனும், சாம்பனும், வாலி சேயும், |