தோள்வளையின் பெருமையை இந்நிலவுலகில் யாரால் அறிந்து சொல்ல முடியும். |
(18) |
| 10350. | பின்னரும், அவனுக்கு ஐயன் பெரு விலை |
| ஆரத்தோடும் |
| மன்னும் நுண் தூசும், மாவும், மதமலைக்கு அரசும்; |
| ஈயா, |
| 'உன்னை நீ அன்றி, இந்த உலகினில் ஒப்பு |
| இலாதாய்! |
| மன்னுக, கதிரோன் மைந்தன்தன்னொடும் மருவி' |
| என்றான். |
| |
ஐயன்- இராமன்; அவனுக்கு- அங்கதனுக்கு;பின்னரும் - மேலும்; பெருவிலை ஆரத்தோடும்- மிக்க விலை உடைய முத்துமாலையோடும்; மன்னும் நுண் தூசும்- நிலைபெற்ற நுண்ணிய பட்டாடையும்; மாவும் - குதிரையும்;மதமலைக்கு அரசும்- யானையும்; ஈயா- அளித்து; 'உன்னை நீ அன்றி இந்த உலகினில் ஒப்பு இலாதாய்! - உனக்கு நீயே அல்லாமல் இந்த உலகில் வேறு உவமை சொல்ல முடியாமல் சிறந்தவனே!கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி மன்னுக- சுக்கிரீவனோடும் பொருந்தி வாழ்க;என்றான் -. |
(19) |
| 10351. | மாருதிதன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் |
| நோக்கி, |
| 'ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று |
| செய்த |
| பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; |
| பைம் பூண் |
| போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் |
| புல்லுக!' என்றான். |
| |
ஐயன் மாருதி தன்னை மகிழ்ந்து இனிது அருளின் நோக்கி - இராமன் அனுமனை மகிழ்ச்சியோடு இனிமையாக அருட் பார்வை பார்த்து; 'பைம்பூண் போர் உதவிய திண்தோளாய்! - பசிய பூண் அணிந்த போர்க்குத் தகுதியாகிய வலிய தோளை உடையவனே! நீ அலால் ஆர் உதவிடுதற்கு ஒத்தார்? - நீ அல்லாமல் வேறு யார் உதவி செய்வதற்கு ஏற்றவர்கள் உளர்; |