பக்கம் எண் :

மனோன்மணீயம்
198

அயன், அரி, அரன், அசுரர் - தேவர்களுக்கு மாறானவர். சுராபானஞ் செய்யாதவர்.

172. பகடி - கேலி.

179. அலால் என்பதற்குப் பதில் அதில் என்றும் பாடம் கொள்ளலாம்.

183. திட்டம் செய்வான் - ஏற்பாடு செய்ய.

----------

மூன்றாம் அங்கம்

முதற் களம்

1. தனையன் - குமாரன், புதல்வன், தனயை - பெண்பால்

6. ஐயுறல் - சந்தேகப்படாதே, எதிர்மறை ஏவல்.

7. பழுது - குற்றம்.

10. மதியில் முதியோன் - அறிவில் முதிர்ந்தவன்.

15. தொல்மொழி - பழமொழி.

16. மருளும் - மயங்கும்

18. கன்றும் - கோபிக்கும், சினம் - கோபம்.

21. திருவும் வெருவும் உருவும் - இலக்குமி தேவியும் பயப்படும் அழகும்.

26. செறித்திடும் சிறையினை - அடைக்கும் அடைப்பை அல்லது அணையை.

29. மலைவு - மயக்கம், தியக்கம்.

35. தகைத்து - தகுதியை யுடையது.

39. பிறழா - மாறுபடாத.

42. மம்மர் உழன்றவன் - மயக்கத்தில் வருந்தினவன், உழல் - பகுதி.

46. பணி ஆற்றுதும் - தொண்டு செய்வோம்.

49. இயம்பல் - சொல்லுதல், அல் ஈற்றுத் தொழிற் பெயர்.

53. பரிவுறல் - அன்பு கூர்தல்

61. ஒருபடித்தன்று - ஒருதன்மையதல்ல.

62. உஞற்றுவன் - செய்வன்.

64. ஏமாப்பு - இன்பம், ஏமா பகுதி.

76. உன்னான் - நினைக்கான்.

81. உரனும் - வலியும்

86. மலையன் - சேரன்.

94. நயந்திலன் - விரும்பிலன்.

105. வெறுக்கை - செல்வம்.

108. துணை - அளவு. தினை, பனை ஈண்டு சிறுமை பெருமையை உணர்த்துவன.

114. அற்றம் - சமயம், காலம்.

127. உன்மத்தன் - பைத்தியக்காரன்.

134. காண்டி - காண்பாய்.

135. செருமுகத்து - போர்க்களத்தில்

138. ஆலவாய் - மதுரை.

141. நிகாதர் - வஞ்சகர்.

144. தவில் - கொட்டு.

151. விழுமிய - சிறந்த, விழுமம் - சிறப்பு, உரிச்சொல்.

158. ஓர்ந்து - ஆராய்ந்து.

164. கோழையர் - உறுதியற்றவர்.

167. விதிர்விதிப்பு - நடுநடுக்கம்.

174. வௌவு - களவுசெய்.

177. இவ்வடியின் கருத்து ஆங்கிலத்தில் Crocodile tears-முதலைக் கண்ணீர் என்பதோ டொத்தது. அதாவது முதலை தான் கொன்ற மிருக முதலியவற்றைத் தின்னும் போது கண்ணீர் விடுக்கும் என்பது உலக வழக்கு.

180. ஓவாது - இடையறாமல், நீங்காமல்.