108

இ-ள் : அரி என்னும் சொல் ஐம்மையாகிய குறிப்புணர்த்தும்; கவவு
என்பது அகத்திடுதலாகிய குறிப்புணர்த்தும், ஐம்மைஅழகுடைமை.

உ-ம் : அரிமயிர்த்  திரள்  முன்கை’  எனவும்,  ‘கழுவிளங்காரம்
கவைஇய மார்பே’ எனவும் வரும்.

ஆதி.

பொருள் : கவவு - வளைத்துப்பிடி - தன்னுட் கொள்ளுதல்
                                 தன்மேற் கொள்ளுதல்

துவைத்தல், சிலைத்தல், இயம்பல், இரங்கல்
 

352.

துவைத்தலுஞ் சிலைத்தலு மியம்பலு மிரங்கலு
மிசைப் பொருட் கிளவி யென்மனார் புலவர்        (61)

(துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
இசைப் பொருட் கிளவி என்மனார் புலவர்).
 

ஆ. மொ. இல.

The poets say that  ‘tuvaiththal’ ‘silaiththal’. ‘iyambal’ and
‘irangal’ are words, which denote noise.

ஆல்.

Scholars  tell  us  that ‘thvaittal’  cilaittal,  ‘iyampal’  and
‘irankal’ mean what these sounds suggest.

பி. இ. நூ.

இல. வி. 2852

துவைத்தல் சிலைத்தல் இயம்பல் இசைசுட்டலும்

இளம்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ  வெனின், இவை நான்கும் இசை பற்றி
வந்தன.

வ-று : 1‘வரிவளை   துவைப்ப’   என்றக்கால்,   சங்கு  இசைப்ப
என்பதாம்.

2‘கலையி னிரலை  சிலைப்ப’  என்றக்கால், அதனது குரலிசைப்பைச்
சொல்லிற்றாம்.

‘ஏறு சிலைக்கும்’ என்பதும் அது.


பொருள் : 1. வரிகளையுடைய சங்கு ஒலிப்ப.

         2. கலைமானொடு இரலைமான் ஒலிப்ப.