சொல்லதிகாரம் | 141 | முத்துவீரியம் |
(வ-று.) ஆ வாழ்க, ஆ வந்தது,
ஆ யாது, ஆ கன்று, ஆ கரிது. (55)
இரண்டாம் வேற்றுமை
513. ஐயே யிரண்டா வதனுரு
பாகும்.
(இ-ள்.) இரண்டாம்
வேற்றுமை யுருபு ஐயொன்றேயாம். (56)
அதன் பொருள் நிலை
514. காப்பி னொப்பி
னாக்கலி னழித்தலின்
அடைதலி னீத்தலி னஞ்சலி னுடைமையின்
அன்ன பிறவு மதன்பய
னிலையே.
(இ-ள்.) காப்பும், ஒப்பும்,
ஆக்கலும், அழித்தலும், அடைதலும், நீத்தலும், அஞ்சலும்,
உடைமையும் இவைபோல்வன பிறவும் இரண்டாம் வேற்றுமைப்
பொருணிலையா மென்க.
(வ-று.) ஊரைப்புரக்கும், வேளையொக்கும்,
மரத்தை வளர்க்கும், வேலியைப்
பிரிக்கும், பதியையடையும். மாயையை நீக்கும், பேயை
யஞ்சும், பொருளையுடையன்
பிறவுமன்ன. (57)
மூன்றாம் வேற்றுமை
515. ஆலா னோடொடு மூன்றன
துருபே.
(இ-ள்.) மூன்றாம் வேற்றுமை
யுருபாவது ஆல், ஆன், ஓடு, ஒடு ஆம். (58)
அதன் பொருள் நிலை
516. கருவி யுடனிகழ்வு
கருத்தா வதன்பொருள்.
(இ-ள்.) கருவியும், உடனிகழ்ச்சியும்,
கருத்தாவும் மூன்றாம் வேற்றுமைப்
பொருணிலையா மென்க.
(வ-று.) வாளால்
வெட்டினான், மகனொடு தந்தை வந்தான், அகத்தியனாற்
றமிழுரைக்கப்பட்டது எனவரும்.
(வி-ரை.) மேலைய
நூற்பாவும், இந்நூற்பாவும்,
‘மூன்றா வதனுரு பாலா னோடொடு
கருவி கருத்தா வுடனிகழ் வதன்பொருள்’ (பெயரியல் - 40)
என்னும் நன்னூற்
கருத்தைத் தழுவியனவாகும். (59)
|