சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் | 1164. | உத்தமத் தானத் தறம்பொரு ளின்ப மொடியெறிந்து வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்குசென்னி மத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக்கீழ்ச் சித்தம்வைத் தாரென்பர் வீடுபே றெய்திய செல்வர்களே. | | 72 |
பற்றி நாடகச் செய்யுளும் கொள்ளப் படும். வல்ல வகையில் - இயன்ற அளவில், கோழைமிட றாககவி கோளுமில வாக இசை | கூடும் வகையால் | | ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொல்மகிழும் | ஈசன்1 |
எனச் சம்பந்தப் பெருமான் அருளிச் செய்தார். வல்ல வகையில் பாட வல்லோர்' - என இயையும். வல்லோர் - மன நிலை கொண்டவர். நெற்றி - மதிலின் நெற்றி. உகுத்த மனம் - உருக்கிச் சேர்த்த மனம். "பாடவல்லோர் உத்தமர் என்பர்' என மாற்றியுரைக்க. "என்பர்" என்பதற்கு, "உயர்ந்தோர்" என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க. 1164.குறிப்புரை: இங்கு, "உத்தமத்தானம்" எனப்பட்டவற்றைச் சேக்கிழார், "காரண பங்கயம் ஐந்து"2 என்றார். அவை மூலாதாரத்திற்கு மேல் உள்ள ஐந்து ஆதாரங்கள். அவற்றில் கீழ் இருந்து பிரமன் விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் ஆகிய காரணக் கடவுளர் வீற்றிருப்ப ராகலின் அவற்றைச் சேக்கிழார், "காரண பங்கயம் ஐந்து" என்றார். அந்த ஐவரும் முறையே படைத்தல் முதலிய ஐந்து தொழில்களைச் செய்வர் ஆதலானும் அவ் ஐந்தொழில்களில் உயிர்கள் பெறுவன வீடுதவிர, அறம் முதலிய ஏனை மூன்று பயன்களே ஆதலாலும் அம் முப்பயன்களுக்குமேலான வீடு பெற நின்றாரை, "அறம், பொருள், இன்பம் ஒடி எறிந்து" என இவ்வாசிரியர் இங்குக் கூறினார். 'ஒடிய' என்பது கடைக் குறைந்து நின்றது. ஒடிய - அழிய. அறம் முதலிய மூன்றும் பிறப்பையே பயப்பனவாம். "அறம், பொருள், இன்பம்" என்பன ஆகுபெயரால் அவற்றின்மேற் செல்லும் ஆசைகளைக் குறித்தன. வித்தகம் - ஞானம். மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களை 'யோகத் தானம்' என வைத்து, ஆஞ்ஞைக்கு மேல் உள்ள ஏழாம் தானமாகிய நிராதாரத்தையும், அதற்குப் பன்னிரு விரற்கடை கடந்துள்ள துவாதசாந்தத்தையும் 'ஞானத் தானம்' என்பார். "வித்தகத்தானம்"
1. திருமுறை - 3.71.1. 2. பெரிய புராணம் - சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார் புராணம்.
|