பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்181


அது பிரசவமாகி குழந்தை பிறந்து விட்டது என்பதுதான் தெளிபொருள்.

     விடுகதையில்  வரும்போது  பாம்பு  ஒன்று  விளையாட்டாய் ஒன்றைக்
கடித்துவிட,  அதனால்  பாம்புக்கு  வீக்கமேற்பட்டு  விட்டது. இதற்கு என்ன
வைத்தியம்   என்று   தேடியபோது,   கடிபட்ட  அந்த  விறப்பையிலிருந்த
வீக்கத்திற்குக்  காரணமான  பொருள்  வெளியேறி  விட்டது.  அது என்ன?
இதற்கு விடையறிய பாடலிலேயே ‘மாது’ என்ற வார்த்தையை யூகத்திற்கொரு
பொருளாகச்   சொல்லிப்   பார்க்கிறார்.   மேலே  சொன்ன  விடுகதையை
பெண்ணுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

     பெண்களின்  அல்குலை  பாம்புக்கு  ஒப்பிடுவர்.  அந்தப்  பாம்பானது
விளையாட்டாய் கடித்த பொருள் ‘ஆணின் கற்பு’. பெண்ணானவள் ஆணோடு
புணர்ந்தது.  யாருக்கும்  தெரியாமல்  இரகசியமாய்ச்  செய்த  இந்தச் செயல்
பலரறியும்படி  உடலானது  வீங்கிக்  காட்டிக்  கொடுத்து  விட்டது. அதாவது
கர்ப்பமடைந்து வயிறு வீங்கி விட்டது.

     இதனை  எப்படி  சமாளிப்பது  என்று  யோசித்துக்  கொண்டிருக்கும்
வேளையில்  கர்ப்பத்தில்  தங்கியிருக்கும்  சிசுவானது  கர்ப்பபையை விட்டு
வெளியே பிரசவமாகி வந்துவிட்டது. அவளது பிரச்சனையும் தீர்ந்தது.

எப்படி இருக்கிறது விடுகதை?

‘நாலுத்தெருவிலே நாலுகம்பம்
நடுத்தெருவிலே பொன்னுக்கம்’

என்று விடுகதையொன்று போட்டுவிட்டு நம்மை விடை காணச் சொல்கின்றார்
பாம்பாட்டிச் சித்தர்.