பக்கம் எண் :

306சித்தர் பாடல்கள்

அக்காரச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே
     ஆகரெண்டு சுண்ணமதை
உக்காரம் மேற்பூசி - ஆத்தாளே
     உலையிலே வைத்தூத.
53
  
எண்ணெய் எல்லாம் போக்குமடி
     இருக்கும் சவுக்காரம்
சுண்ணமடி மேற்கவசம் - ஆத்தாளே
     சொல்லுகிறேன் அப்புச்சுண்ணம்.
54
  
கற்பூரச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே
     கலந்திருந்த இண்டு மடி
செப்பமுள்ள செயநீரால் - ஆத்தாளே
     சேர்த்தாட்டி வீரமிட்டு.
55
  
வழமலைக்கு - ஆத்தாளே
     வளமாய்ப் பொதிந்தபின்பு
தழலிலே தானாட்டி - ஆத்தாளே
     சற்குருவாம் உப்பாலே.
56
  
உப்புச் சுண்ணங் கற்பூரம் - ஆத்தாளே
     உண்மை சவுக்காரம்
செப்பமுடன் மூன்றுசுண்ணம் - ஆத்தாளே
     சேர்த்துரவியில் இட்டு.
57
  
இக்குருவில் மஞ்சாடி ஆத்தாளே
     எடுத்துத் துருசில் இட்டு
முக்கியமுடன் மேற்கவசம் - ஆத்தாளே
     முன்பூசி வெயிலில் வைக்க.
58
  
சுண்ணாம்பு தங்கியிது - ஆத்தாளே
     துடிதாளகம் வெளுக்கும்
சுண்ணாம்பு வங்கமடி - ஆத்தாளே
     துடிலிங்கம் கைமாட்டும்.
59
  
சாதிலிங்கச் சுண்ணாம்பு - ஆத்தாளே
     தனிலோகச் சுண்ணாம்பாம்