நாதாந்தச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே நாகமிதிற் சுண்ணாம்பாம். | 60 |
| | |
சுண்ணாந்தா னாகவடி - ஆத்தாளே துடிகெந்த கம்வெளுப்பாம் சுண்ணாம்பாங் கெந்தகந்தான் - ஆத்தாளே துடியானை பட்டுவிடும். | 61 |
| | |
சூதனடி பட்டாண்டி - ஆத்தாளே சூழ்ந்து அங்கந் தான்சேர்க்க வேதை சவ்வீரனடி - ஆத்தாளே மீறும்வகை மூன்றுமொன்றாய். | 62 |
| | |
சேர்ந்திருக்க வேமணியாம் - ஆத்தாளே செம்புவெள்ளி சேர்ந்தேதான் நூத்துக்கொரு மாவிடவே - ஆத்தாளே நூத்தெட்டு மாத்தாகும். | 63 |
| | |
இத்தங்கம் செந்தூரம் - ஆத்தாளே இந்த மணியாலே சத்தபேதி யாகுமடி - ஆத்தாளே தான்பரிச பேதியிதாம். | 64 |
| | |
மண்டலம் பேதிக்குமடி - ஆத்தாளே மலையும் பழுக்குமடி அண்டத்தை தொட்டாட்ட - ஆத்தாளே அடங்காப் பொருளாகும். | 65 |
| | |
மண்ணேது கல்லேது - ஆத்தாளே மரமேது இவ்வேதை ஒண்ணாது வொண்ணாது - ஆத்தாளே ஒடுங்கும் பொருளைப்பேண். | 66 |
| | |
தாளகம் வெள்ளியிலே - ஆத்தாளே தப்பாது பத்தரையும் பாளித்த லோகச்சுண்ணம் - ஆத்தாளே பத்தரையாம் வங்கமதில். | 67 |