பக்கம் எண் :

308சித்தர் பாடல்கள்

வீரச்சுண்ணம் வெள்ளியதாம் - ஆத்தாளே
     வெள்ளிபதி னெட்டாகும்
பூரச்சுண்ணஞ் சேர்க்கவடி - ஆத்தாளே
     பொன்வயதோ எண்ணான்காம்.
68
  
சிலபற்பம் செம்பினிலே - ஆத்தாளே
     சேர்க்கவய எட்டரையாம்
துலையாக் கவர்கோடி - ஆத்தாளே
     சொன்னார் திருமூலர்.
69
  
பார்த்தேனடி கண்டேனடி - ஆத்தாளே
     பாசங் குருபாதம்
காத்தேனடி கண்டேனடி - ஆத்தாளே
     கைமுறையாம் என்னூல்தான்.
70
  
கருவை ஒளியாமல் - ஆத்தாளே
     காசினியில் உள்ளோர்க்குக்
குருவைநாம் காண்பித்தோம் - ஆத்தாளே
     குணமான வாதவித்தை.
71
  
உண்டென்ற பேர்க்குமடி - ஆத்தாளே
     உண்டாய் இருக்குமடி
சண்டாளன் ஆனாக்கால் - ஆத்தாளே
     தான்லபிக்க மாட்டாதே.
72
  
லபிக்க வழி சொல்லுகிறேன் - ஆத்தாளே
     நந்திதிரு மூலரையும்
லபிக்கக் கா லாங்கியையும் - ஆத்தாளே
     நாதாந்தப் போகரையும்.
73
  
சத்தி சிதம்பரமும் - ஆத்தாளே
     சட்டைமுனி பூசைசெய்வாய்
உத்தமக் கொங்கணரை - ஆத்தாளே
     உசிதமாய்ப் பூசைசெய்வாய்.
74
  
கருவூரா னானந்தர் - ஆத்தாளே
     கண்டு வழிதெரிந்தோர்