பக்கம் எண் :

310சித்தர் பாடல்கள்

நாற்பதுநாள் கொள்வாரேல் - ஆத்தாளே
     நற்கதவு ஐஞ்சுந் திறக்கும்
தீர்க்கமதாய் சித்தியுண்டாம் - ஆத்தாளே
     தேகம் வச்ரகாயமதாம்.
83
  
மறவாமற் கற்பவகை - ஆத்தாளே
     மனசாரத் தின்றுவிட்டால்
இறவாமல் அட்டசித்தி - ஆத்தாளே
     இக்கற்பங்கொண்ட பின்பு.
84
  
உற்றதொரு கற்பமதை - ஆத்தாளே
     உணவாகத் தின்றுவிட்டால்
செத்திறந்து போவதில்லை - ஆத்தாளே
     திடமா யிருக்குமடி.
85
  
கெதிபெற வேணுமென்றால் - ஆத்தாளே
     கேளாம லேகேட்டு
மதியமுதம் கொண்டபின்பு - ஆத்தாளே
     மறுகற்பம் கொண்டிடுவாய்.
86
  
வேதாள கற்பமதை - ஆத்தாளே
     விதுவளரும் அட்டமிநாள்
மாதாவிம் மூலிகைக்கு - ஆத்தாளே
     மயமாய்நெய் வேத்யமிட்டு.
87
  
நமக்கரித்துத் தரம்நோக்கி - ஆத்தாளே
     நயமாக வாங்கிவந்த
நமக்கார சித்தியுடன் - ஆத்தாளே
     நன்றாய் நிழலுலர்த்தி.
88
  
சூரணஞ் செய்தேதான் - ஆத்தாளே
     சுயமான நாள்பார்த்து
மீரும் வெருகடியாய் - ஆத்தாளே
     வேண்டுந்தேன் நெய்சேர்த்து.
89
  
கொள்ளவே மண்டலந்தான் - ஆத்தாளே
     கூறுமட்ட சித்தியுண்டாம்