பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்311


தெள்ளும் அவர்களுக்கு - ஆத்தாளே
     தேவ வருடமதில்.
90
  
பதினா யிரவருடம் - ஆத்தாளே
     பண்பாய் இருப்பனடி
ரதிவேதப் பெண்முதலாய் - ஆத்தாளே
     நன்மையுடன் மேவுவர் பார்.
91
  
பூலோக மாதர்களை - ஆத்தாளே
     புகலவே ஆகாது
மேலோகப் பெண்கள்சித்தி - ஆத்தாளே
     மேவுதற்குந் தானாகும்.
92
  
கையான்சங் காயளவு - ஆத்தாளே
     கறிமிளக திற்பாதி
செய்யாதி மண்டலமே - ஆத்தாளே
     தின்றால் நரைகளில்லை.
93
  
திரையில்லை அட்டசித்தி - ஆத்தாளே
     தேகமது எவ்வர்ணமாய்
வரைவச்ர காயமதாம் - ஆத்தாளே
     வயதுமுந் நூறிருப்பன்.
94
  
கொடுப்பையிலை லேசாக - ஆத்தாளே
     கொள்வாயோர் மண்டலமே
நடுக்கமில்லை தான் பகலில் - ஆத்தாளே
     நட்சத் திரந்தோன்றும்.
95
  
பத்தியம் பச்சரிசி - ஆத்தாளே
     பாலிட்ட சோறாகும்
மத்தொன்றும் ஆகாதே - ஆத்தாளே
     வண்மையுடன் இக்கொடுப்பை.
96
  
சமூலம் கழுவிநன்றாய் - ஆத்தாளே
     தயவாய் நிழல் உலர்த்தி
சமூலம் இடித்துநன்றாய் - ஆத்தாளே
     சதிராகச் சூரணஞ்செய்.
97