பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்307


நாதாந்தச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே
     நாகமிதிற் சுண்ணாம்பாம்.
60
  
சுண்ணாந்தா னாகவடி - ஆத்தாளே
     துடிகெந்த கம்வெளுப்பாம்
சுண்ணாம்பாங் கெந்தகந்தான் - ஆத்தாளே
     துடியானை பட்டுவிடும்.
61
  
சூதனடி பட்டாண்டி - ஆத்தாளே
     சூழ்ந்து அங்கந் தான்சேர்க்க
வேதை சவ்வீரனடி - ஆத்தாளே
     மீறும்வகை மூன்றுமொன்றாய்.
62
  
சேர்ந்திருக்க வேமணியாம் - ஆத்தாளே
     செம்புவெள்ளி சேர்ந்தேதான்
நூத்துக்கொரு மாவிடவே - ஆத்தாளே
     நூத்தெட்டு மாத்தாகும்.
63
  
இத்தங்கம் செந்தூரம் - ஆத்தாளே
     இந்த மணியாலே
சத்தபேதி யாகுமடி - ஆத்தாளே
     தான்பரிச பேதியிதாம்.
64
  
மண்டலம் பேதிக்குமடி - ஆத்தாளே
     மலையும் பழுக்குமடி
அண்டத்தை தொட்டாட்ட - ஆத்தாளே
     அடங்காப் பொருளாகும்.
65
  
மண்ணேது கல்லேது - ஆத்தாளே
     மரமேது இவ்வேதை
ஒண்ணாது வொண்ணாது - ஆத்தாளே
     ஒடுங்கும் பொருளைப்பேண்.
66
  
தாளகம் வெள்ளியிலே - ஆத்தாளே
     தப்பாது பத்தரையும்
பாளித்த லோகச்சுண்ணம் - ஆத்தாளே
     பத்தரையாம் வங்கமதில்.
67