கேடுவரும் என்றறியேன் கெடுமதிகண் தோற்றாமல் பாடுவரும் என்றறியேன் - என் ஆத்தாளே பதியில் இருந்தாண்டி. | 132 |
| | |
எல்லோரும் போனவழி இன்னவிட மென்றறியேன் பொல்லாங்கு தீரவடி - என் ஆத்தாளே பொறிஅழியக் காணேன்டி. | 133 |
| | |
உட்கோட்டைக்கு உள்ளிருந்தோர் ஒக்கமடிந்தார்கள் இக்கோட்டைக் குள்ளாக - என் ஆத்தாளே எல்லோரும் பட்டார்கள். | 134 |
| | |
உட்கோட்டை தானும் ஊடுருவ வெந்தாக்கால் கற்கோட்டை எல்லாம் - என் ஆத்தாளே கரிக்கோட்டை ஆச்சுதடி. | 135 |
| | |
தொண்ணூற்று அறுவரையும் சுட்டேன் துருசறவே கண்ணேறு வாறாமல் - என் ஆத்தாளே கருவருக்க வந்தான்டி. | 136 |
| | |
ஓங்காரம் கேட்குதடி உள்ளமெல்லாம் ஒக்குதடி ஆங்காரம் பட்டுவிழ - என் ஆத்தாளே அடியோடு அறுத்தாண்டி. | 137 |
| | |
முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி தன்னையறிந்து - என் ஆத்தாளே தானொருத்தி யானேன்டி. | 138 |
| | |
என்னை எனக்கறிய இருவினையும் ஊடறுத்தான் தன்னை அறியவாடி - என் ஆத்தாளே தனித்திருக்கல் னேன்டி. | 139 |
| | |
இன்னந் தனியேநான் இங்கிருக்க மாட்டேன்டி சொன்னசொற் றிரவடிவு - என் ஆத்தாளே சுட்டான் துருசறவே. | 140 |
| | |
வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளி யாச்சுதடி காட்டுக்கு எரித்தநிலா - என் ஆத்தாளே கனாவாச்சு கண்டதெல்லாம். | 141 |