பக்கம் எண் :

318சித்தர் பாடல்கள்

நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்குப் பட்டலவோ
பகையாரோ விண்டவர்கள் - என் ஆத்தாளே
     பாசம் பகையாச்சே.
142
  
என்னையிவன் சுட்டாண்டி எங்கே இருந்தான்டி
கன்னி அழித்தாண்டி - என் ஆத்தாளே
     கற்பைக் குலைத்தான்டி.
143
  
உள்ளுரையிற் கள்ளனடி உபாயம் பலபேசிக்
கள்ளக்கண் கட்டியடி - என் ஆத்தாளே
     காலைப் பிடித்தான்டி.
144
  
பற்றத்தான் பற்றுவரோ பதியி லிருந்தான்டி
எற்றத்தான் என்றவரோ - என் ஆத்தாளே
     என்னை அறிந்தான்டி.
145
  
கண்டாருக்கு ஒக்குமடி கசடுவித்தை அத்தனையும்
பெண்டாக வைப்பனென்று - என் ஆத்தாளே
     பேசாது அளித்தான்டி.
146
  
மால்கோட்டை இட்டுமென்னை வசையிலாக் காவல்வைத்
தோல்கோட்டை இட்டடியோ - என் ஆத்தாளே
     தடுமாறச் சொன்னான்டி.
147
  
எந்தவித மோஅறியேன் இம்மாயஞ் செய்தான்டி
சந்தைக் கடைத்தெருவே - என் ஆத்தாளே
     தடுமாறச் சொன்னான்டி.
148
  
சூலத்துக்கு ஆதியடி துன்பமுற வந்தூடே
பாலத்தில் ஏறியடி - என் ஆத்தாளே
     பங்கம் அளித்தான்டி.
149
  
பண்டிவனை நானறியேன் பலகாலம் வந்தான்டி
அண்டி இருந்தான்டி - என் ஆத்தாளே
     ஆகலத்தில் வைத்தான்டி.
150
  
பத்தினியாய் என்நாளும் பாடறிந்து சூடாமல்
மத்தியா னத்தில் என்னை - என் ஆத்தாளே
     வாசிரிக்கச் சொன்னான்டி.
151