"சாற்றிய
பல்கலையுந் தப்பா அருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாம் - தோற்றவே
முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினு மில்."
"ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு."
"ஐயாறு
நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் -
பொய்யாது
தந்தா னுலகிற்குத் தான்வன் ளுவனாகி
அந்தா மரைமே லயன்."
"எப்பொருளும்
யாரும் இயல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செய்பவரும் -
முப்பாற்குப்
பார தஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்."
"ஏதமில்
வள்ளுவர் இன்குறள்வெண் பாவினால்
ஓதிய ஒண்பொரு ளெல்லாம் - உரைத்ததனால்
தாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன."
"இன்பம்
பொருளறம் வீடென்னும் இந்நான்கும்
முன்பறியச் சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட்
குள்ள அரிதென் றவைவள் ளுவருலகங்
கொள்ள மொழிந்தார் குறள்."
"வேதப்
பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழா லுரைசெய்தார் - ஆதலால்
உள்ளுந ருள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு."
"ஒருவ ரிருகுறளே முப்பாலி னோதுந்
தரும் முதனான்குஞ் சாலும் - அருமறைகள்
ஐந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்."
"சிந்தைக்
கினிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண் பா." |