209. நலிதல் - வருந்துதல். 234. செவ்வே வடக்கு - நேர் வடக்கு. முறி - அறை, முறிக்கப்பட்டது. அதாவது அறுக்கப்பட்டது. 230-235.[இக் கேள்விகளால் குடிலன் சுருங்கை இருக்க வேண்டுமிடம் இன்னதென்று ஊகித்து நிச்சயித்துக் கொண்டு தான் அதனை முன்னமே கண்டுணர்ந்தவன் போலப் பாவனை காட்டுகிறான்.] 242. புந்தி - புத்தி. 245. பாங்கோ - முறையோ, நலமோ. [பண்டே - கோட்டை காண அழைத்த நாளில்.] 255. தேன் ஆர் தெரியல் சூடுமுன் - தேன் வண்டுகள் மொய்க்கின்ற மணமாலை சூடுவதற்கு முன். அதாவது கலியாணமாகுமுன், தேன் - மதுவுமாம். 256. அந்நியர்பால் - அயலாரிடம். 268. சதி - வஞ்சனை. 271. கருநா - விடநாக்கு, கருநாவுடையவர் சொல்லும் தீ மொழி பலிக்கும். 277. குழாம் - கூட்டம். 280. காண்டும் - காண்போம். 285. அல் - இரவு. 287. நுவல்தரு - சொல்லப்படும். 293. [இதுபோல் - இச்சேரனது துர்க்குணம்போல்.] 303. [பாண்டம் - மட்கலம், கடையிற் கொண்ட பொருள்களைக் கொடுத்து மாறிக்கொள்ளலாம். அப்படியன்றே விவாகத்தில் கொள்ளல். இது ஒரு கிராமியப் பழமொழி.] 306. உசாவி - விசாரித்து கேட்டு ஆராய்ந்து. 324. விருத்தமாய் - வீணாய். 325. கலுழுநள் - அழுகின்றாள், கலுழ் பகுதி. 337. [அதுவும் தன்னயம் கருதல் மாத்திரமன்றி அங்ஙனம் கருதுவதாகப் பிறர்க்குத் தோற்றத்தக்கதும்.] 334. மிகை - மிகுதியானது. 351. ஒவா - நீங்காத. 353. [மீட்டுதும் - மனோன்மணியை.] 366. ஆய்வு - ஆராய்ச்சி. 364. [குறியே இதனை 366 ல் உள்ள ஆய்விடும் என்பதோடு சேர்க்க.] 369. [எண்ணினன் - முனிவன் எழுவாய்.] 370. ஊகம் - ஊகிக்கும் கருத்து. 380. [துணிந்தன - எழுவாய் படைஞராகிய நாய்கள்.] 382. [எளியன் - நாரணன்.] கலித்துறை :- விராகம் - வி+ராகம். ஆசையின்மை, ஆணவம் - அகங்காரம், பெயர்ந்து - நீங்கி. [இக்களத்தில் அரசர் கடமையும் ஆண்மையும் ஜீவகனது ஏழைமையும் குடிலனுடைய சமயோசித சாமர்த்தியமும் விளங்கலாம். அங்க முடிவில் வரும் கலித்துறை தேகாபிமான பலத்தையும 'ஞானமில் வைராக்கியம் நன்றன்று' என்னும் தத்துவ நூலின் கொள்கையையும் அவ்வங்கத்து நடந்த கதையால் விளக்குகின்றது.] -------- ஐந்தாம் அங்கம் முதற்களம். 2. இருசரம் - இருவழி, ஈரம்பு. 5. கோள் - கொள்கை. 6. ஒருங்கே - ஒருசேர, முற்றும். 7. [இன்றேல் - இசைகுவது இன்றேல்.] 12. பாண்டில் - வண்டி.
|