பக்கம் எண் :
 

 202                                   யாப்பருங்கல விருத்தி

     ‘குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
     றுண்டாகச் செய்வான் வினை’.1

 எனவும்,

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘மாயோன் மார்பில் ஆரம் போலச்
     சேயுயர் நெடுவரைப் பெருந்தேன் ஒழுகு
     சாரல் நாடன் நம்மோ டொருசிறை
     சாரிற் சாரா நோயே
     சாரா னாயின் நோய்தணி வின்றே’.

 எனவும் இவ்வாறு சொல் வேறுபட்டு அடிமுழுதும் அலகிடுகை யான் ஒரு
 சீரான் வரின் ஆகாது; சொல் வேறுபடாது, பொருள் பிறதாகியும் ஆகாதும்
 வருவதே கொள்ளப்படும் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

[பஃறொடை வெண்பா]

     ‘ஓடையே2 ஓடையே ஓடையே ஓடையே
     கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும்
     மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும்
     கோடலங் கொல்லைப் புனத்தும் கொடுங்குழாய்!
     நாடி உணர்வார்ப் பெறின்’.

 இது பொருள் வேறாய் ஒரு சொல்லே வந்த இரட்டைத் தொடை.

     ‘இயற்று’ என்னாது, ‘இயற்றே’ என்று ஏகாரம் மிகுத்துச் சொல்ல
 வேண்டியது என்னை? ஓரடி முற்றெதுகையாய், மற்றையடி மற்றொரு
 முற்றெதுகையாய் வந்தால், அதனை ‘இரு முற்று இரட்டை’ என்பர்.
 நிரனிறையினையும் இரட்டைத் தொடைப்பாற்படுத்து வழங்குவர் ஒரு சார்
 ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

 வரலாறு:

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘அடியியற் கொடியன மடிபுனம் விடியல்
     மந்தி தந்த முந்து செந்தினை
     உறுபார்ப் பருத்தும் நாடனொடு
     சிறிதால் அம்ம நம்மிடைத் தொடர்பே’.


  1. குறள், 785 2. ஓடை - குடை வேலமரம். மலைவழி; யானை நெற்றிப்
 பட்டம், நீரோடை எனக் கொள்க.