பக்கம் எண் :


440


    4-5.புன்னையில் நாரை இருத்தல்: குறுந். 296:1-2; அகநா. 100:13-4, 190:7-8.

    6.சேர்ப்பன் உண்ட நலன்: குறுந். 133:5, ஒப்பு.

    2-6. என் நலத்தைத் தாவென்றல்: குறுந். 238:3-4, 349:3-4; நற். 395:9-10; ஐங். 159;5; கலி. 128:10-11; அகநா. 376:18, 396:19;ஐந். எழு. 64, 66; தொல். கற்பு.8.

(236)
  
(பொருளுக்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் அதனைஈட்டிக் கொண்டு மீள்கையில், தேர்ப்பாகனை நோக்கி, ‘‘எனக்கும்தலைவிக்கும் உள்ள இடையிடம் சேயதாகவும் பல இடையூறுகளைஉடையதாகவும் உள்ளது. ஆயினும் என் நெஞ்சு அவள்பால் விரைந்துசென்றது” என்று கூறியது.)
 237.   
அஞ்சுவ தறியா தமர்துணைதழீஇய 
    
நெஞ்சுநப் பிரிந்தன் றாயினு மெஞ்சிய 
    
கைபிணி நெகிழினஃ தெவனோ நன்றும் 
    
சேய வம்ம விருமா மிடையே 
5
மாக்கடற் றிரையின் முழங்கி வலனேர்பு  
    
கோட்புலி வழங்குஞ் சோலை 
    
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே. 

என்பது பொருள் முற்றி மீள்வான், தேர்ப்பாகனுக்கு உரைத்தது

(பி-ம். உரைப்பானாய்த் தன் நெஞ்சிற் குரைத்தது.)

அள்ளூர் நன்முல்லை.

    (பி-ம்.) 2. ‘நெஞ்சுணப்'; 4. ‘விருவர் தமிடையே'; 5. ‘முழங்கு'.

    (ப-ரை.) பாக, அஞ்சுவது அறியாது - அஞ்சுதலைஅறியாமல், அமர் துணை தழீஇய - நாம் விரும்பும்தலைவியைத் தழுவும் பொருட்டு, நெஞ்சு - என் நெஞ்சு,நம் பிரிந்தன்று - நம்மைப் பிரிந்து சென்றது; ஆயினும் -ஆனாலும், எஞ்சிய - குறைபாடாக உள்ள, கை பிணிநெகிழின் - கையாற்றழுவுதல் நெகிழுமாயின், அஃது எவன் -நெஞ்சு சென்று தழுவிய அதனால் பயன் யாது? இருவாம்இடை - யானும் தலைவியுமாகிய இருவருக்கும் இடையில்உள்ள இடங்கள், நன்றும் சேய - மிக்க சேய்மையைஉடையன; முயக்கிடை மலைவு - தலைவியோடு சேர்தற்குஇடையிலே உள்ள தடையாகிய, கோள் புலி - கொலைசெய்யும் புலியானது, மா கடல் திரையின் முழங்கி - கரியகடலின் அலையைப் போல ஆரவாரம் செய்து, வலன