மலைந்து வெற்றிபெற்றவர். அதனானன்றே, "மறன் எறிந்த வாளார் நெடுமாறன் வள்ளுவனார்" என்று கொடி ஞாழல் மாணிபூதனார் கூறலாயினார். திருவள்ளுவர் கி. மு. 75 முதல் கி. பி. 36 வரை வாழ்ந்தவர். ஆனபடியால், இவர் பிறப்பதற்கு 25 ஆண்டுகள் முன்னர் அஃதாவது கி. மு. 100-இல் திருமூலர் "தமிழ் மூவாயிரம்" என்னும் நூலை இயற்றி, தம்முடைய ஏழு சீடர்களுக்கும் உபதேசித்துவிட்டுப் பரமுத்தி யடைந்ததை அறிந்தவர் ஆனபடியால், தமிழ் மூவாயிரத்தை நன்குகற்றார். தமிழ் மூவாயிரத்தினின்றும் திருவள்ளுவர் எடுத்தாண்ட பகுதிகளில் சிலவற்றை ஈண்டுத் தருகின்றாம்: 1. "ஆரும் அறியார் அகாரம் அவனென்று." - தமிழ் மூவாயிரம் அகரம் முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்." - திருக்குறள் 2. "அறிவுடையைார் நெஞ்சொடு ஆதிபகவனும்." - தமிழ் மூவாயிரம் "ஆதிபகவன் முதற்றேயுலகு." - திருக்குறள் 3. "போதுகந் தேறும் புரிசடை யானடி." - தமிழ் மூவாயிரம் "மலர்மிசை ஏகினான்." - திருக்குறள் 4. "பொருளதுவாய் நின்ற புண்ணியன்." - தமிழ் மூவாயிரம் "இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார்." - திருக்குறள் (பொருள்சேர் இறைவன் புகழ் புரிந்தார்) 5. "எண் சத்தி தூய்மையும்." - தமிழ் மூவாயிரம் "எண் குணத்தான்." - திருக்குறள் 6. "தன்னை யொப்பார் ஒன்றுமில்லாத் தலைமகன்."- தமிழ் மூவாயிரம் "தனக்கு உவமை யில்லாதான்." - திருக்குறள் 7. "அறவாழி அந்தணன் ஆதி பராபரன்." - தமிழ் மூவாயிரம் "அறவாழி அந்தணன் தாள்." - திருக்குறள 8. "விளைக்கும் தவம் அறம் மேல் துணை யாமே."- தமிழ் மூவாயிரம் "தானம் தவம் இரண்டும்." - திருக்குறள் 9. "முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவெனும் தோட்டியால் வைத்தேன்."- தமிழ் மூவாயிரம் "உரன் என்னும் தோட்டியால் ஓர் ஐந்தும் காத்தல்." - திருக்குறள் 10. "ஆமே சுவை ஒளி யூறோசை நாற்றம்." - தமிழ் மூவாயிரம் "சுவை ஒளி யூறோசை நாற்றமென் றைந்தின்." - திருக்குறள்
|