சத்தி நாயனார் | 1147. | கிரிவில் லவர்தம் மடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன திருவில் லவரையந் நாவரி வோன்திருந் தாரைவெல்லும் வரிவில் லவன்வயல் செங்கழு நீரின் மருவுதென்றல் தெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே. | | 55 |
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் | 1148. | சத்தித் தடக்கைக் குமரன்நற் றாதைதன் தானமெல்லாம் முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா மத்திற்கு மும்மைநன் தாளரற் காயையம் ஏற்றலென்னும் பத்திக் கடல் ஐயடிகளா கின்றநம் பல்லவனே. | | 56 |
சுந்தரமூர்த்தி நாயனார் | 1149. | பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ் சொல்லவன் தென்புக லூரான் பால்துய்ய செம்பொன்கொள்ள வல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு நல்லவன் தன்பதி நாவலூ ராகின்ற நன்னகரே. | | 57 |
1147. குறிப்புரை: கிரி வில்லவர் - மகாமேரு மலையாகிய வில்லை உடையவர்; சிவபெருமான். கீழ்மை சொல்லுதல் - இழித்துரைத்தல். திருஇல்லவர் - நல் ஊழ் இல்லாதவர்; பாவிகள். வரி வில்லவர் - வரிந்து கட்டப்பட்ட வில்லை ஏந்தியவர். விரை - நறுமணம். வரிஞ்சை - வரிஞ்சையூர். 1148. குறிப்புரை: சத்தித் தடக்கைக் குமரன் - முருகக் கடவுள். அவனுக்குத் தாதை சிவபெருமான். தானம் - தலங்கள். 'தானம் எல்லாம் சென்று, என ஒரு சொல் வருவிக்க. முத்திப் பதம் - மோட்சமாகிய அந்த ஒரு பதவியின் பெருமையைப் பற்றியே. முடி அரசு ஆம் அத்தில் - முடிபுனைந்து ஆள்கின்ற அரசர் ஆகின்ற அதைவிட. அரற்கு ஆள் ஆய் ஐயம் ஏற்றல் மும்மை நன்று என்னும் - சிவபெருமானுக்கு ஆளாகிப் பிச்சை ஏற்று உண்டல் மும்மடங்கு நன்றாகும்' என்று அருளிச்செய்த. இவர் அருளிச் செய்த தனி வெண்பாக்கள் கிடைத்த அளவில் 'சேத்திரத் திருவெண்பா' - எனப் பதினொன்றாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. பல்லவர்கள் தமிழ் நாட்டிற்குப் புதியரானமை பற்றி அவர்களைச் சேக்கிழார் புராணம் "குறுநில மன்னர்" என்றது. 1149. குறிப்புரை: 'தக்கன் வேள்வியில் சூரியன் பல் உதிர்க்கப்பட்டான்' என்பது புராணம். செங்கதிரோன் - சூரியன்.
|