பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை852

கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப்
புயலார் தருகையி னைனென்னத் தோன்றிடும் புண்ணியமே.

49

1231.புண்ணிய நாடு புகுவதற் காகப் புலனடக்கி,
எண்ணிய செய்தொழில் நிற்ப(து)எல் லாருமின் றியானெனக்கு
நண்ணிய செய்தொழில் ஞானசம் பந்தனை நந்தமர்நீர்க்
கண்ணியன் மாடக் கழுமலத் தானைக் கருதுவதே.

50

 

திருமருகல். புயல் ஆந்தரு கை - மேகத்தின் தன்மை நிறைந்த கை. அத்தன்மையாவது, கைம்மாறு கருதாது வழங்குதல். இத்தன்மை திருவீழி மிழலையில் காணப்பட்டது. 'கருணையாகிய வெள்ளத்தை உணவு உருவாக்கிப் பொழிந்த கையையுடைய ஞானசம்பந்தன்' என ஒருகாற் சொல்லவே புண்ணியம் வந்து சேரும் - என்பதாம்.

1231. குறிப்புரை: 'புண்ணிய நாடு புகுவதற்காக (ப் பண்டு தொட்டு) எல்லாரும் நிற்பது, புலன்களை அடக்கி, (ஞான நூல்களில்) முறைப்பட வைத்து எண்ணிய தொழில்களில். இன்று யான் எனக்கு ஏற்ற தொழிலாக நண்ணிய (மேற் கொண்ட) தொழில் ஞானசம்பந்தனை நினைப்பது ஒன்றே' என்க.

புண்ணிய நாடு, இறையுலகம். வைணவர்கள், 'திருநாடு' என்பர். நந்து - சங்கு. 'நீர்க் கழுமலம், மாடக் கழுமலம்' - எனத் தனித் தனி முடிக்க. கண் இயல் மாடம் - கண்ணுக்கு இயன்ற (அழகு மிக்க) மாட மாளிகைகள். முன்பு "புலன் அடக்கி," பின்பு, 'புலன் அடக்காமல்' என்பது வருவிக்கப்படும். இதனால், ஞானசம்பந்தரைத் தியானிக்கும் தியான பலத்தின் சிறப்புக் கூறப்பட்டதாம்.

வீடும், ஞானமும் வேண்டுதி ரேல்,

விரதங்களால்

வாடின் ஞானம் என் ஆவதும்! எந்தை

வலஞ்சுழி

நாடி, ஞானசம் பந்தன செந்தமிழ்

கொண்டு இசை

பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது

ஞானமே1

என அவர்தாமே அருளிச் செய்தமை இங்கு அறியற்பாலது.


1. திருமுறை - 2.2.11.