1. | இறந்த காலத்து இரங்கல் குறள் வெண்செந்துறை வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம் சாத்திரங்கள் சொல்லிச் சதுர் இழந்து கெட்டேனே. |
| | |
| 2. | மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத் தத்தித் தலை கீழாய்த் தான் நடந்து கெட்டேனே; |
| | |
| 3. | வழக்கத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும் பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே. |
| | |
| 4. | ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும் காணில் நமது என்று கனம் பேசிக் கெட்டேனே. |
| | |
| 5. | ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே. |
| | |
| 6. | குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக் கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே. |
| | |
| 7. | ஆலம் அருந்தும் அரன்பெருமை எண்ணாமல் பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே. |
| | |
| 8. | பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய்யென்று பண ஆசையாலே பதி இழந்து கெட்டேனே. |
| | |
| 9. | கண்ட புலவர் கனக்கவே தான் புகழ உண்ட உடம்பெல்லாம் உப்பரித்துக் கெட்டேனே. |
| | |
| 10. | எண்ணிறந்த சென்மம் எடுத்துச் சிவபூசை பண்ணிப் பிழையாமல் பதி இழந்து கெட்டேனே. |
| | |
| 11. | சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறாஉடம்பை உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே. |
| | |
| 12. | தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று எண்ணும் உணர்வு இல்லாமல் இன்பம் என்று மாண்டேனே. |