24. | எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பம் என்று உற்றுனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே! |
| |
25. | எத்தனை தாய் தந்தை இவர்களிடதே இருந்து பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே! |
| |
26. | பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் யானும்; உன்றன் பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே! |
| |
27. | உற்றார் அழுது அலுத்தார், உறன் முறையார் சுட்டலுத்தார்; பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் பூரணமே! |
| |
28. | பிரமன் படைத்து அலுத்தான்; பிறந்து இறந்து நான் அலுத்தேன்; உரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே! |
| |
29. | எண்பத்து நான்கு நூறாயிரம் செனனமும் செனித்துப் புண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே! |
| |
30. | என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே! |
| |
31. | கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய் அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே! |
| |
32. | செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல் பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே! |
| |
33. | எனக்குள்ளே நீ இருக்க, உனக்குள்ளே நான் இருக்க, மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே! |
| |
34. | எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதைப் பழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே! |
| |
35. | சாதி பேதங்கள் தனை அறிய மாட்டாமல் வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே! |
| |
36. | குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான் மலபாண்டத் துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே! |