65. | வாரிதியாய், வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்டம் எல்லாம் சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே! |
| |
66. | வித்தாய், மரமாய், வெளியாய், ஒளியாய் நீ சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே! |
| |
67. | தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால் உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே! |
| |
68. | ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும் என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே! |
| |
69. | நேற்று என்றும் நாளை என்றும் நினைப்புமறப் பாய்ப்படைத்தும் மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே! |
| |
70. | மனம்புத்தி சித்தம்மகிழ் அறிவு ஆங்காரமதாய் நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே! |
| |
71. | உருப்பேதம் இன்றி உய்ந்தசப்த பேதமதாய்க் குருப்பேத மாய்வந்த குணம் அறியேன் பூரணமே! |
| |
72. | சட்சமய பேதங்கள் தான்வகுத்துப், பின்னும்ஒரு உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே! |
| |
73. | முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்துபடைத்து உள்ளிருந்த செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே! |
| |
74. | என்னதான் கற்றால்என்? எப்பொருளும் பெற்றால்என்? உன்னை அறியாதார் உய்வரோ? பூரணமே! |
| |
75. | கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப் பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே! |
| |
76. | வான்என்பார்; அண்டம்என்பார்; வாய்ஞான மேபேசித் தான் என்பார் வீணர்; தனை அறியார் பூரணமே! |
| |
77. | ஆதி என்பார்; அந்தம் என்பார்; அதற்குள்நடுவாய் இருந்த சோதிஎன்பார்; நாதத் தொழில் அறியார்; பூரணமே! |