91. | பூசையுடன் புவன போகம்எனும் போக்கியத்தால் ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே! |
| |
92. | படைத்தும் அழித்திடுவாய்; பார்க்கில் பிரமாவெழுத்தைத் துடைத்துச் சிரஞ்சீ வியாய்த் துலங்குவிப்பாய்; பூரணமே! |
| |
93. | மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த தந்திரத்தை நான் அறியத் தகுமோ தான் பூரணமே! |
| |
94. | அல்லாய்ப் பகலாய் அனவரத காலம் எனும் சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன்; பூரணமே! |
| |
95. | நரகம் சுவர்க்கம்என நண்ணும் இரண்டு உண்டாயும் அரகரா என்பது அறிகிலேன்; பூரணமே! |
| |
96. | பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன்; பூரணமே! |
| |
97. | சாந்தம் என்றும், கோபம் என்றும், சாதிபேதங்கள் என்றும் பாந்தம் என்றும், புத்தியென்றும் படைத்தனையே; பூரணமே! |
| |
98. | பாசம் உடலாய்ப் பசு அதுவும் தான்உயிராய் நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே, பூரணமே! |
| |
99. | ஏதில் அடியார் இரங்கி இகத்தில் வந்துன் பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே! |
| |
100. | நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால் தேனின் ருசியது போல் தெவிட்டாய்நீ பூரணமே! |
| |
101. | முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல் அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேனே; பூரணமே! |
| |
102. | பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய்; பூரணமே! |
| |
1. | நெஞ்சொடு மகிழ்தல் அன்று முதல் இன்றளவும் ஆக்கையொடு சூட்சியுமாய் நின்ற நிலை அறிய நேசமுற்றாய், நெஞ்சமே! |