பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்317


கேடுவரும் என்றறியேன் கெடுமதிகண் தோற்றாமல்
பாடுவரும் என்றறியேன் - என் ஆத்தாளே
     பதியில் இருந்தாண்டி.
132
  
எல்லோரும் போனவழி இன்னவிட மென்றறியேன்
பொல்லாங்கு தீரவடி - என் ஆத்தாளே
     பொறிஅழியக் காணேன்டி.
133
  
உட்கோட்டைக்கு உள்ளிருந்தோர் ஒக்கமடிந்தார்கள்
இக்கோட்டைக் குள்ளாக - என் ஆத்தாளே
     எல்லோரும் பட்டார்கள்.
134
  
உட்கோட்டை தானும் ஊடுருவ வெந்தாக்கால்
கற்கோட்டை எல்லாம் - என் ஆத்தாளே
     கரிக்கோட்டை ஆச்சுதடி.
135
  
தொண்ணூற்று அறுவரையும் சுட்டேன் துருசறவே
கண்ணேறு வாறாமல் - என் ஆத்தாளே
     கருவருக்க வந்தான்டி.
136
  
ஓங்காரம் கேட்குதடி உள்ளமெல்லாம் ஒக்குதடி
ஆங்காரம் பட்டுவிழ - என் ஆத்தாளே
     அடியோடு அறுத்தாண்டி.
137
  
முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி
தன்னையறிந்து - என் ஆத்தாளே
     தானொருத்தி யானேன்டி.
138
  
என்னை எனக்கறிய இருவினையும் ஊடறுத்தான்
தன்னை அறியவாடி - என் ஆத்தாளே
     தனித்திருக்கல் னேன்டி.
139
  
இன்னந் தனியேநான் இங்கிருக்க மாட்டேன்டி
சொன்னசொற் றிரவடிவு - என் ஆத்தாளே
     சுட்டான் துருசறவே.
140
  
வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளி யாச்சுதடி
காட்டுக்கு எரித்தநிலா - என் ஆத்தாளே
     கனாவாச்சு கண்டதெல்லாம்.
141