அவவேடம் பூண்டிங் கலைந்து திரியாமற் சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம். | 29 |
| | |
அண்டருக்கா நஞ்சருந்தி அம்பலத்தி லாடுசிவன் தொண்டருக்குத் தொண்டனென தொண்டுசெய்வ தெக்காலம். | 30 |
| | |
பன்றி வடிவெடுத்துப் பாரிடந்து மால்காணாக் குன்றில் விளக்கொளியைக் கூறுவது மெக்காலம். | 31 |
| | |
தித்திக்குந் தெள்ளமிர்தை சித்தாந்தத் துட்பொருளை முத்திக்கு வித்தை முதனினைப்ப தெக்காலம். | 32 |
| | |
வேதாந்த வேதமெல்லாம் விட்டொழிந்தே நிஷ்டையிலே ஏகாந்தமாக யிருப்பதினி யெக்காலம். | 33 |
| | |
மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல் உற்றிடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம். | 34 |
| | |
இன்றுளோர் நாளை யிருப்பதுவும் பொய்யெனவே மன்றுளோர் சொல்லும் வகையறிவ தெக்காலம். | 35 |
| | |
கஞ்சா அபினியுடன் கள்ளுண்டே வாடாமற் பஞ்சாமிர்தத்தைப் பருகுவது மெக்காலம். | 36 |
| | |
செஞ்சலத்தி னாற்றிரண்ட ஜெனனமோக்ஷம் பெறவே சஞ்சலத்தை விட்டுன் சரணடைவ தெக்காலம். | 37 |
| | |
கும்பிக் கிரைத்தேடிக் கொடுப்பா ரிடந்தோறும் வெம்பித் திரிகை விடுப்பதினி யெக்காலம். | 38 |
| | |
ஆடுகின்ற சூத்திரந்தான் அறுமளவுமே திரிந்து போடுன்றநாள்வருமுன் போற்றுவது மெக்காலம். | 39 |
| | |
நவசூத் திரவீட்டை நானென் றலையாமல் சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவ தெக்காலம். | 40 |
| | |
மறந்து மலசலங்கள் மாய்ப்புழுக் கூட்டைவிட்டுக் கரந்துன் அடியினைக் கீழ்க் கலந்துநிற்ப தெக்காலம். | 41 |
| | |
இம்மை தனிற்பாதகனாய் இருவினைக்கீ டாயெடுத்த பொம்மை தனைப்போட்டுன்னைப் போற்றி நிற்ப தெக்காலம். | 42 |