பக்கம் எண் :

304சித்தர் பாடல்கள்

பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்குக்
கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும்
கற்பூவும் வாசனையும் கண்டது உண்டே யாமானால்
     பொற்பூவும் வாசனையின்             என் கண்ணம்மா
     புலன்கள் தெரியவேண்டி.
39
  
ஆதிமதி என்னும் அதின் விடாய் தான்அடங்கிச்
சோதிவிந்து நாதமெனச் சுக்கிலமாய் நின்றதடி
சோதிவிந்து நாமெனச் சுக்கிலமாய் நின்றாக்கால்
     நீதியுடன் பூர்வபட்சம்               என் கண்ணம்மா
     நிலைதெரிய மாட்டேனோ.
40
  
ஞானமிது நாற்பதையும் நலமாக வேதெரிய
மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன்;
மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள்
     ஞானம் அடைவார்கள்               என் கண்ணம்மா
     நன்மைபெற்று வாழ்வார்கள்.
41
  

வாத கற்பம்

கண்ணிகள்

மூலம்நடுவீதி ஆத்தாளே மும்மண்டலத்து அமர்ந்த
நீலகண்ட வத்துவைத்தான் - ஆத்தாளே
     நின்மலனைப் போற்றுவனே.

42
  
மேகத்தான் விந்தாச்சு - ஆத்தாளே
     விசயரவிச் சுண்ணாம்பாம்
ஆகச் சிவநீரால் - ஆத்தாளே
     அட்டசித்தி அவள்சக்தி.
43
  
இரவி முகத்தாலே - ஆத்தாளே
     ஈசன் என்ற உப்பாச்சு
வருகங்கை தன்னாலே - ஆத்தாளே
     மயமாகச் சுத்தம் செய்தே.
44
  
முந்தின உப்பிரண்டும் - ஆத்தாளே
     முழுக்கல்லுப் பொன்னாகத்