பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்305


தொந்திக்க இவ்விடைக்க - ஆத்தாளே
     சூழ்சீனங் கால்சேர்த்து.
45
  
ஆறுதலச்செயநீர் - ஆத்தாளே
     அதிலேகற் சுண்ணாம்பாம்
மீறுமிந்தச் சுண்ணாம்பில் - ஆத்தாளே
     வீரமுடன் கற்பூரம்.
46
  
சாரநீரால் அரைத்து - ஆத்தாளே
     தனிக்கவச மேபூசி
ஆறுவகைச் செயநீரால் - ஆத்தாளே
     அதன்மேலே சுத்திவைக்க.
47
  
உப்பென்று அறியாரே - ஆத்தாளே
     உலகத்தி லுள்ளோர்கள்
உப்பல்லோ சுண்ணாம்பாம் - ஆத்தாளே
     ஊர்க்குள் விலைகூறுதடி.
48
  
சவ்வீரம் முப்புச்சுண்ணம் - ஆத்தாளே
     தனிப்பூரம் மேற்பூசி
ஒவ்வாத பான்முகத்தில் - ஆத்தாளே
     ஊடுருவச் சுண்ணாம்பாம்.
49
  
காரமிதில் ஏற்றலடி - ஆத்தாளே
     கருஅறியார் தண்ணீரைச்
சீருடனே குத்தியடி - ஆத்தாளே
     தீமுகத்தில் வாட்டிவிடு.
50
  
கற்பூரச் சுண்ணமடி - ஆத்தாளே
     கடுங்காரச் சுண்ணமடி
வெற்பாக வைத்தானே - ஆத்தாளே
     வேதைகவர் கோடியடி.
51
  
எண்ணெண் சரக்குமடி - ஆத்தாளே
     இப்பூரச் சுண்ணமடி
கண்ணத்தில் வீரர்
     கசதில் சுண்ணாம்பாம்.
52