பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்313


உள்ளுணர்வாய் நின்றிருக்கும் - ஆத்தாளே
     ஓங்காரம் தன்னையுமே
எள்ளுளவா கிலுந்தான் - ஆத்தாளே
     ஏத்தித் துதிப்பாயே.
106
  
பாவிகள் தங்களுக்கு - ஆத்தாளே
     பரிவாக இந்நூலைத்
தாவிக் கொடுக்காதே - ஆத்தாளே
     சண்டாளர் தங்களுக்கே.
107
  
அனுபோக கற்பசித்தி - ஆத்தாளே
     ஆகுமிதைப் படித்தோர்
மனுவிக்யா னந்தெரிந்து - ஆத்தாளே
     வாழ்வார் வெகுகோடி.
108
  
                 ஆறாதாரம்

ஞானநூல் கற்றால் எவன் தற்றுறவு பூண்டால் என்
மோன சமாதி முயன்றால் என் - தானாகி
எல்லாக் கவலையும் ஆற்று இன்புற் றிருப்பதுவே
சொல்லாரும் முத்தி சுகம்.
 
  
மேலத் தெருவாகி விந்துதித்த வீடாகிக்
கோலத்தி னாலேயடி கூறும் அறுகோணம்
சீலத்தில் முக்கோணம் சேர்ந்தப்பு வீடாகி
மூலத்தில் மண்ணாகி - என் ஆத்தாளே
     முதலெழுத்தைப் போற்றி செய்தேன்.
109
  
ஆதியெனும் மூலமடி அவ்வோடே உவ்வாகி
நீதியெனும் நாளமடி நின்று விசையெழுப்பி
சாதிமதி யென்னும் தாகவிடாய் தானடங்கிச்
சோதிவிந்து நாதமென்ன - என் ஆத்தாளே
     சுக்கிலமாய் நின்றதடி.
110